ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக விஜய் சேதுபதி செய்த தானம்

தமிழ் சினிமாவின் அதிகம் பிஸியாக இருக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இவர் மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாக ஒரு கண் மருத்துவமனையினை இன்று திறந்து வைத்தார். அவருடன் இயக்குனர் கே.வி.ஆனந்த்தும் இருந்தார்.

அப்போது தன் இரண்டு கண்களையும் தானம் தருவதாக அறிவித்தார் விஜய் சேதுபதி. ‘கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் அவசியம்’ என்று விஜய் சேதுபதி பேசினார்.

-cineulagam.com