தலைவர் பிரபாகரன் புறமுதுகைக் காட்டிக்கொண்டு ஓடவில்லை! தென்னிந்திய நடிகையின் புகழாரம்

kasturi3தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புறமுதுகைக் காட்டிக்கொண்டு ஓடவில்லை என தென்னிந்திய நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்னொரு அரசாங்கத்திடம் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் செய்த தியாகத்தை நான் நம்புகின்றேன். ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய அவருக்கு எதிர்ப்புகள் வரவே செய்யும்.

தலைவர் பிரபாகரன் யாரையும் தனியே போரிடுவதற்காக அனுப்பவில்லை. மாறாக தானும் களத்தில் இறங்கி போராடியிருந்தார். அவருடையை பிள்ளைகளையும் போராட அனுப்பி வைத்தார்.

பிரபாகரன் உனக்கொரு ஞாயம், எனக்கொரு ஞாயம் என்று சொல்லவில்லை. அதுவே சிறந்த தலைமைத்துவமாகும். அதனை யாரால் மறுக்க முடியும்,

அவர் உயிரிழந்து விட்டார். தான் எதை நம்பினாரோ அதற்காகவே அவர் உயிரிழந்து விட்டார். தலைவர் பிரபாகரன் புறமுதுகைக் காட்டிக்கொண்டு ஓடவில்லை.

இன்னொரு அரசாங்கத்திடம் அமைச்சர் பதவியொன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. தொலை இயக்கி மூலம் இந்த உலகில் பலர் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தலைவர் பிரபாகரன் அப்படி செய்யவில்லை. விடுதலைப் புலிகளின் போராளிகளாக இருந்தவர்களை நேரில் பார்த்தவள் என்ற ரீதியில், தமிழர்களுக்காக மாபெரும் தியாகத்தை செய்தவரே பிரபாகரன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-tamilwin.com