900 படங்களில் நடித்தும் ஒரு நடிகர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லை..!!

vasuகல்லீரல் நோய் பாதிப்பால் காலமான நடிகர் அல்வா வாசுவின் உடல் , அவரது சொந்த ஊரான மதுரையில் தகனம் செய்யப்பட்டது.

900 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார் என்பது குறிபிடதக்கது.. இவரது உடல்  அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது,

அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் சொந்தங்களை தவிர சினிமா பிரபலங்கள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விக்னேஷ் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்,வேறு யாரும் வர வில்லை

விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பிரபலங்கள்  மட்டுமே அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவருடன் அதிகமான படங்களில் நடித்த வடிவேலு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை, பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை பலரது படங்களில் வேலை செய்துள்ள இவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்த வராதது குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-tamilcnn.lk/