மானம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் அடிப்பானா? ரஜினி, ஆர்யா என அனைவரையும் திட்டிய இயக்குனர்

திரைப்பட துறையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் எப்போது தீரும் என்று தெரியாது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில், மானம், வெட்கம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் அடிப்பானா என்று பேசியிருக்கிறார்.

அதோடு ரஜினி, அர்ஜுன், பிரபுதேவா, பாபி சிம்ஹா எல்லோரும் தமிழர்களா, ஒரு படத்தில் ரூ. 20 கோடிக்கு சம்பளம் வாங்கும் ஆர்யா எனக்கு தமிழ் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது என்று கூறுகிறார்.

அதோடு கன்னடத்தில் போய் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை அவனே ஆழ வேண்டும், ஆனால் தமிழ்நாட்டில் வந்து தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்று பேசுகிறார். அவரை நாம் அடித்து விரட்டினோமா.

கர்நாடகாவில் எம்.ஜி.ஆரின் பதாகை வைக்கப்பட்டது. அதை பார்த்த கன்னடர்கள் அவர் கன்னடரா பின் ஏன் அவர் பதாகை இங்கே வைக்கப்பட்டது என்று கூறி அதை கிழித்து எரிந்தனர். அவர்களின் இன வெறியை பாராட்டுகின்றேன் என்று பரபரப்பு நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதேபோல் விஜய்யை பற்றியும் மிகவும் கோபமாக பேசியிருக்கிறார்.

-cineulagam.com