நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த அரசு.. நன்றி தெரிவித்தார் நடிகர் பிரபு!

சென்னை: சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் விதி எண் 110இன் கீழ் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

அதாவது, மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் ரூ. 100 கோடியில் நீர் நிலைகள் தூர்வாரப்படும்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் 4 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்பவாகும். அக்டோபர் 1-ந்தேதி நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அவரது குடும்பம் ஆகியவை நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என்றும் பிரபு தெரிவித்தார்.

-tamil.oneindia.com