விவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்- என்ன ஒரு மனிதர்

அகரம் என்றதன் மூலம் நடிகர் சூர்யா எப்படிபட்ட புனிதமான விஷயத்தை செய்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

குழந்தைகளின் படிப்பிற்காக நிறைய விஷயங்கள் செய்து வரும் சூர்யா அரசின் 400 பள்ளிகளுக்கு கழிவறை கட்டித்தர இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நேரத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட சூர்யா விவசாய குடும்பங்களுக்காக ரூ. 1 கோடி கொடுத்துள்ளார்.

இந்த தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாக சூர்யாவை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.

-cineulagam.com