பழம் பெரும் நடிகையின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோன சம்பவம்! உண்மை இதோ – இப்போது யாரிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ஹீரொயினாக கொடி கட்டி பறந்த நடிகை காஞ்சனா. அண்மையில் அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய்க்கு பாட்டியாக நடித்திருந்தார்.

150க்கும் அதிகமான படங்களில் நடித்த இவருக்கு தற்போது வயது 79. விமான பணிப்பெண்ணாக இருந்த இவரை ஸ்ரீதர் தன் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.

வசுந்த்ரா தேவி என்ற அவரின் பெயரை காஞ்சனா என மாற்றியதும் இவர் தான். தற்போது தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் மறந்து விட்டார்களாம்.

இதனால் அவரும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இந்நிலையில்ன் இவர் சம்பாதித்து சென்னை தி நகரில் வாங்கிய ரூ 80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உறவினர்கள் அபகரித்து விட்டார்களாம்.

வழக்கு பதிந்து அதில் சாதகமாக தீர்ப்பானதால் அந்த சொத்துக்களை அப்படியே ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்திவிட்டாராம்.

-cineulagam.com