2.0 அருமை! படத்தின் தயாரிப்பாளர் ஒரு ஈழத் தமிழர் – லைக்கா சுபாஷ்கரன்!

திரையில் பார்த்தால்தான் ரசிக்கலாம் என்பதுபோன்ற பிரமாண்டத்தை காட்டி வந்திருக்கிறது 2.0. தமிழில் முப்பரிமாண திரைப்படம் என்றால் இதுதான் என்பதை நிறுவ கணினி வரைகலைத் தொழில் நுட்பத்தைக் கசக்கிப் பிழிந்த நிலையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. (1) சமகாலத்து தமிழ் உச்ச நட்சத்திரம், (2) உச்சத்திலிருக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குனர், (3) தமிழ்த் திரை இசையில் உச்சத்தை தொட்டுவிட்ட இசையமைப்பாளர், மற்றும் வட இந்திய அக்ஷய் குமார் & ஏராளமான தமிழ், தமிழரல்லாத தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் பங்களிக்க உருவாகியிருக்கிறது.

லண்டன் போன்ற நகரங்களில் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக 2.0 படத்திற்கான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து வெள்ளை இன மக்களே அசந்து போயுள்ளார்கள். பேசாமல் இப் படத்தை ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கலாமே என்று பல ஆங்கில நண்பர்கள் என்னிடம் கூறி கவலையடைந்துள்ளார்கள் என்கிறார் என்னோடு வேலை பார்கும் சிலர். அந்த அளவு படத்தின் பிரம்மாண்டம் இருக்கிறது. தமிழில் இனி இதனை விட வேறு ஒரு படம் இப்படி வெளியாகாது என்று பேசுகிறார்கள்.

அதிலும் பெருமை என்னவென்றால், இதனை ஈழத் தமிழர் ஒருவர் தயாரித்துள்ளது தான். அவர் வேறுயாருமே அல்ல. லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஷ்கரன் தான்.

-athirvu.in