இந்திய ரயில்வே துறையில் மீண்டும் மண் குவளைகள் கொண்டுவரப்படுவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாரணாசி, மற்றும் ரேபரேலி ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண் குவளையிலும், பீங்கான் தட்டுகளிலும் வழங்க கோரியுள்ளார். ரயில்வே அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே, மற்றும் வடகிழக்கு ரயில்வே மேலாளர்களும் மண் குவளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் மண் குவளையில் தேநீர், பால், காபி ஆகியவற்றை அருந்துவது பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை தருவதாகவும் , இதை தயாரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
–இந்து தமிழ்

























