வசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார், அதிர்ச்சியில் திரையுலகம்

சினிமாவில் எல்லா துறையிலும் இருக்கும் கலைஞர்களுக்கு அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்கும்.

அப்படி வசனங்களில் ஒரு தனி வழி அமைத்து அதில் வெற்றியும் கண்டவர் கிரேஸி மோகன் அவர்கள்.

இவர் கமல்ஹாசன் நடிக்க இருந்த சபாஷ் நாயுடு படத்திற்கும் வசனம் எழுதுவதாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி கேட்டு மக்கள் முதல் பிரபலங்கள் வரை அவர் குணமடைய வேண்டும் என்று வேண்டினர்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று மதியம் 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

-cineulagam.com