காஷ்மீர் என்கவுன்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா : காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஆகியோர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு குழுவினர், மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அன்சார் கஸ்வா உல் ஹிந்த் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜன்ஜீர் ரபிக் வானி, ராஜா உமர் மக்பூல் பத் மற்றும் உசைர் அமின் பட் என்பது உயிரிழந்த பயங்கரவாதிகளின் பெயர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களை பற்றிய மேலும் பல விபரங்களும், பயங்கரவாதிகள் வேறு யாராவது பதுங்கி உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

dinamalar