நான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன்: பிறந்த நாளில் நடிகை சமந்தா அளித்த பதில்

நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன.

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார்.  2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.  விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்தநிலையில் இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கொரானோ ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்தே சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்த சமந்தா கடந்த சில நாட்களாக மீண்டும் அதில் திரும்பி இருக்கிறார். இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அதற்காக அவருடைய கணவர் நாகசைதன்யாவே பிறந்த நாள் கேக்கைத் தயார் செய்திருக்கிறார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா. மேலும், அந்த கேக்கை வெட்டுவதற்கு முன்பாக அவர் பிரேயர் செய்துள்ளார்.

நான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன் என்பதை யூகிக்க வேண்டியதில்லை. குடும்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதியுஷா என்கிற தொண்டு நிறுவனத்தை சமந்தா நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi