இந்தியாவில் புதிய உச்சம்; கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 24 ஆயிரத்து 879 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 67  ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் புதிதாக 487 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 129 ஆக உயர்ந்து இருக்கிறது.

malaimalar