மத்திய அரசுடன் இன்று விவசாயிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடில்லி: டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் இன்று அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டு ‘டில்லி சலோ’ என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,, டில்லி – ஹரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் கடந்த 1-ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து 10 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிச.3-ம் தேதி நடக்கும் .அதுவரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.இதையடுத்த இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.

dinamalar