தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்

சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  • மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி

  • அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படலாம்

  • உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை செயல்படலாம்

  • புதுச்சேரிக்கு பஸ் சேவையை துவக்கலாம்

  • புதுச்சேரி தவிர அண்டை மாநிலங்களுக்கு பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை

  • பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது.

  • திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

dinamalar