சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா- அதிர்ச்சிக்குள்ளான இரசிகர்கள்

பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அதற்கு காரணம் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார். போஸ்டரை பார்த்த அனைவரும் பிரபுதேவாவா இப்படி, சந்தோஷ் பட போஸ்டர் என்று நம்ப முடியவில்லை என்கிறார்கள்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, இரண்டாம் குத்து என்று அடல்ட் காமெடி படங்களை எடுத்தவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அதிலும் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரை பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதை பார்த்த சந்தோஷ், பாரதிராஜாவை விளாசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. அதை பார்த்தவர்களோ, பிரபுதேவாவுக்கு என்ன ஆச்சு, ஏன் இந்த ஆள் படத்தில் போய் நடிக்கிறார் என்று விமர்சித்தார்கள்.

டான்ஸால் பெற்ற நல்ல பெயரை எல்லாம் ஒரு ஆபாச படத்தால் இழக்கப் போகிறார் பிரபுதேவா என்றார்கள் சினிமா ரசிகர்கள். இந்நிலையில் தான் சந்தோஷ் ஜெயகுமார், பிரபுதேவா கூட்டணி சேர்ந்திருக்கும் படத்திற்கு பொய்க்கால் குதிரை என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.

போஸ்டரை பார்த்தவர்கள் மிரண்டே போனார்கள். கவர்ச்சியை எதிர்பார்த்த இடத்தில் பிரபுதேவா மாற்றுத்திறனாளியாக ரத்த காயங்களுடன் சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டு நிற்கிறார்.

பிரபுதேவானாவே கால் வேலை தானே. அவருக்கு ஒரு கால் இல்லாமல் ப்ராஸ்தெடிக் கால் வைத்திருக்கிறார் ஜெயகுமார். அப்படி என்றால் இது ஆபாச படம் இல்லை ஏதோ தரமான சம்பவம் போன்று.

பிரபுதேவா தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவில்லை. தெரிந்து தான் சந்தோஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

பிரபுதேவா நல்ல முடிவைத்தான் எடுத்துள்ளார் என்று இரசிகர்கள் நம்புகிரார்கள். அவர் மக்கள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும்.அவர் ஆபாச படங்களில் நடிக்கமாட்டார், மக்களுக்கு நல்ல கருத்து தெரிவிக்கும் படங்களில் மட்டுமேதான் நடிப்பார் என நாம் ஆணித்தரமாக கூறலாம்.

பொய்க்கால் குதிரை படத்தில் நடிப்புக்கு பெயர் போன வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.