கனமழை: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (நவ.,08) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை தஞ்சாவூர், சேலம், வேலூர், நாமக்கல், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திருப்பத்தூர், நாகப்பட்டினம், சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதையடுத்து ராட்சத பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

dinamalar