11 சுரங்கப் பாதைகள் மூடல்; சென்னையில் போக்குவரத்து துண்டிப்பு; மக்கள் வெளியே வர வேண்டாம்

சென்னை : வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தற்போது பெய்து வரும் அதி கன மழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது. மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை நகர் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 11 சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளது. எனவே சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

11 சுரங்கப்பாதைகள் விபரம்

  1. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
  2. தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை,
  3. கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை
  4. கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை
  5. அஜாக்ஸ் சுரங்கப்பாதை
  6. 6.கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
  7. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
  8. தாம்பரம் சுரங்கப்பாதை
  9. கணேசபுரம் சுரங்கப்பாதை
  10. வியாசர்பாடி சுரங்கப்பாதை
  11. அரங்கநாதன் சுரங்கப்பாதை .

கமிஷனர் எச்சரிக்கை

மழை காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார் .

dailythanthi