இந்தியர்களுக்கு இந்த ஆண்டு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு – தூதரகத் தலைவர் தகவல்

இந்தியர்களுக்கு இந்த ஆண்டு அதிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வேலை, படிப்பு, சுற்றுலா,வணிகம் என பல வகைகளில்அமெரிக்க விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.

மேலும் கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களைத் திறந்தும் விசா ஒப்புதல் நடைமுறையை துரிதப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது குறித்து மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் கூறியதாவது:- இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல்அளித்தது. இவற்றில் கல்விக்கானவிசா மட்டும் 1.25 லட்சம் ஆகும்.இந்த ஆண்டில் இன்னும் அதிகவிசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கதிட்டமிட்டுள்ளோம்.

அதேபோல்,முதல் முறையாக பி1, பி2 சுற்றுலாமற்றும் தொழில்முறை பயணவிசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம்குறைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவில்2.5 லட்சம் பி1 மற்றும் பி2 விசாக்களை வெளியிட்டுள்ளோம். விசாபுதுப்பிக்க இனி மக்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம் அனுப்பலாம். அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான நடை முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் விசா காத்திருப்புக் காலத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இவ்வாறு ஜான் பல்லார்ட் கூறினார்.

-dt