இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அச்சம்

பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, ராணுவ படை உதவியுடன் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் ராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என தெரிவித்து உள்ளது.

காஷ்மீரில் வன்முறை பரவி அமைதியற்ற சூழல் அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுடன் கூடிய, இரு தரப்பிலும் அதிகரித்து வரும் பதற்றங்களால் நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது என அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

-dt