‘ட்விட்டருக்கு’ அடிமையாகாதீர் : எச்சரிக்கிறார் நிறுவனர்

சமூக வலைத் தளமான “ட்விட்டரிலேயே’ பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என  ‘ட்விட்டர்’ நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தற்போது ‘ட்விட்டரை’ உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பொழுதைக் கழிப்பதற்காக பலர் தங்கள் வாழ்க்கையைக் கூட தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். பல மணி நேரங்கள், அதாவது 12 மணி நேரம் வரை செலவழிக்கின்றனர். இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.

இதுபோன்ற சமூக வலைத் தளம் அல்லது இணையதளத்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக, நீங்கள் விரும்பும் ஒன்றைப் பார்ப்பதற்காக, நீங்கள் விரும்புவதைக் கற்றுக் கொள்வதற்காக அணுகலாம். அதுதான் நலமான வழி. இவ்வாறு பிஜ் ஸ்டோன் தெரிவித்தார்.