இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் : வேல்முருகன்

“தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப்போல் செய்து வருகிறது சிங்கள கடற்படை” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான். இல்லையேல், தமிழக மீனவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஆயுதமேந்துவது. இந்த இரண்டில் ஒன்று மட்டுமே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் சொன்னார்.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது நீடிக்குமேயானால் தமிழகத்தை விட்டே இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறோம்.

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அடியோடு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மீனவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போரா டும்’’  என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

TAGS: