ஒருவர் மட்டுமே நடிக்கும் தமிழ் படம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவர் மட்டுமே நடித்து ஒரு படம் தமிழில் வெளிவந்தது. வெளிவந்த வேகத்திலேயே பெட்யெில் சுருண்டது. நடுக் காட்டில் ஒரு சைக்கோவிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதைதான் அது.

இப்போது ஒருவர் மட்டுமே நடிக்கும் படம் ஒன்று தயாராகி வருகிறது. படத்தின் பெயர் ‘ஹோம் மினிஸ்டர்’. ஒருவராக நடிப்பவர் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த். ராஜமாணிக்கம் இயக்குகிறார். பிரிமூஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தீவிரவாதிகளால் கடத்தி ஒரு மர்ம பங்காளாவில் அடைக்கப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரியான வேணு அரவிந்த் தனி ஆளாக அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. படத்தில் அவர் மட்டுமே நடித்திருப்பார் மற்ற கேரக்டர்களின் குரல் மட்டுமே கேட்கும். டிஜிட்டலில் தயாராகிறது இந்த வித்தியாசமான முயற்சி.

அடுத்து, ஆளே இல்லால் படம் எடுப்பாங்களோ…!