மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி

india_parlimentபுதுடெல்லி : டெல்லி அருகே ஓடும் பஸ்சில் மருத்துவக் கல்வி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

கேள்வி நேரத்தை இரத்து செய்துவிட்டு இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர்கள் அனுமதி அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஷாநவாஸ் ஹுசேன், மேல்சபையில் ஸ்மிர்தி இராணி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து 15 நிமிடங்கள் நாடாளுமன்ற மேல்சபை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் முன்னே நாளை தர்ணா போராட்டம் நடத்தவும் பா.ஜ.க., எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளனர்.

TAGS: