தாத்தா பேரன் கதைகளுக்கு கிராக்கி

rajkiranகடந்த, 2005ம் ஆண்டு, தனுஷ்-பிரியா மணி நடிப்பில், அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்.

தாத்தா பேரனுக்கிடையே உள்ள உறவை மையமாக வைத்து, உருவாகியுள்ள, இப்படத்தில், பேரன் வேடத்தில்,சசிகுமார் நடித்துள்ளார்.

ஆனால், இதில் பாலுமகேந்திராவும், ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ஆனால், அது தாத்தா வேடமா? இல்லை வேறு வேடமா? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

மேலும்,விமல்  ராஜ்கிரண் நடித்துள்ள, ஒரு படமும் இதேபோல்,தாத்தா பேரன் உறவுகளுக்கிடையே நிகழும், பாசப்போராட்டத்தை மையப்படுத்திதான் உருவாகியுள்ளது.

ராஜ்கிரண் தாத்தாவாகவும், விமல் பேரனாகவும் நடித்துள்ளனர். இந்த படங்களை தொடர்ந்து, தாத்தா  பேரன் கதைகளுக்கு கோலிவுட்டில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.