ஹீரோக்களை சுற்றவிடும் நயன்தாரா

nayan_thara_new_001தன்னை காதலிப்பதற்காக சுற்றிவரும் கதாநாயகர்களை சுற்ற விடுகிறாராம் நயன்தாரா.

சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தாலும் இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருக்கிறாராம் நயன்தாரா.

முதல் காதல் சிம்புவுடன் நடந்தது, இருவரும் ஆழமாக காதலித்தனர்.

திருமணத்துக்கும் தயாரானார்கள், திடீரென அது முறிந்தது.

காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் இரண்டாவதாக பிரபு தேவா வந்தார்.

அவரின் ஆறுதல் பேச்சில் மனதை இழந்தார். இருவரும் காதலித்தார்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக வந்து நெருக்கத்தை பகிரங்கப்படுத்தினர்.

மனைவியை விவாகரத்து செய்து விட்டு நயன்தாராவை மணக்க பிரபுதேவா தயார். ஆனால் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்த நிலையில் இவர்களும் பிரிந்தார்கள்.

இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்றாலும் பழைய மார்க்கெட் சரியவில்லையாம்.

தற்போது ஆர்யாவுக்கு நயன்தாரா மேல் காதல் துளிர்த்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன.

இது போல் இன்னாரு இரண்டெழுத்து கதாநாயகனும் அவரை விரும்புகிறாராம்.

அத்துடன் பெரிய தொழில் அதிபர்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பி தூது விட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

ஆனால் யாருடைய காதலையும் நயன்தாரா ஏற்கவில்லை.

எற்கனவே பட்ட அனுபவங்கள் மூலம் இனி என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று சொல்லி விலகி போகிறாராம்.