இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய வேளையிது!
இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும், அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டிலே செயற்படும் தமிழ் தேசிய…
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக…
இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர். இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று உயர் அதிகாரிகள் இவ்வாறு சாட்சிமளித்துள்ளனர். நாட்டில் போர்ககுற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் பொய்யான சாட்சியமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.…
மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன்
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்று தன்னுடைய தலைமையில் அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பத்தினரையும் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த…
பெளத்த மயமாகி வரும் கதிர்காம திருத்தலம்: வடக்கு முதலமைச்சர்
கதிர்காமத்திற்கு நான் ஒவ்வொரு வருடமும் சென்று தரிசித்து வந்தேன். ஆனால் கடந்த சில தினங்களாக நான் கதிர்காமத்திற்கு செல்லவில்லை. அந்த பூமி தற்பொழுது பெளத்த மயமாகி வருகிறது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று நடைபெற்ற நாவலர் விழா மற்றும் ”கதிர்காமத்தை தரிசித்த…
வடக்கிலிருந்து இராணுவமும், புத்தர் சிலைகளும் அகற்றப்படாது!
வடக்கில் இருந்து இராணுவமும், புத்தர் சிலைகளும் அகற்றப்படாதிருக்க தாம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றினால் தமக்கு ஆதரவளிப்பதாக சிலர் கூறுகின்றனர். தற்போதே வடமாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை…
மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது போராடுவோம்!- வி.உருத்திரகுமாரன்
மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை, இராணுவ வெளியேற்றம் உட்பட்ட ஐந்து நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் முன்வைத்து இடையறாது போராடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். சுயநிர்ணய உரிமை, அனைத்துலக விசாரணை,…
யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!
இராணுவ பாதுகாப்புக்களைத் தாண்டியும் யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவீரர் தினத்தை முன்னிட்டு பல்கலைக் கழக வளாகத்திலுள்ள நினைவுத்தூபியில் மாணவர்கள் தீபங்கள் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்து இராணுவமும், பொலிஸாரும் காத்திருந்த வேளையில், பல்கலைக் கழகத்தின் மாணவர் பொது அறையில்…
மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள்
தாய் நாட்டுக்காக போராடி மண்ணில் விதையான ஈழத்தமிழ் இனத்தின் வீர வேங்கைகளான மாவீரர்களின் நாள் இன்று. ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. தமிழீழத்தின் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்…
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மீண்டும் உறுதி: சுஸ்மா
இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று இலங்கை மீண்டும் உறுதியளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் தொடர்பிலேயே இலங்கை இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் லோக்சபாவில் நேற்று அறிவித்தார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் செப்டம்பர் 7-13 மற்றும்…
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க பிரித்தானியாவின் எம்.பிமார் பரிந்துரை
போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் குழுவுக்கு இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காவிட்டால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை கொண்டு வருமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர். பிரித்தானியாவின் வெளியுறவு விவகார பொதுச்சபைக்குழு நேற்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளின்படி, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக இலங்கைக்கு கால…
அகவை 60 காணும் தலைவா! நீ பிறந்த மண்ணில் பிறந்ததே…
உலகத்தின் எத்தனையோ நாடுகளில் மக்கள் மூடநம்பிக்கைக்குள்ளும் அடிமைத்தனத்துக்குள்ளும் அகப்பட்டு முன்னேற்றமடைவதற்கோ முடியாதவர்களாக உணவுக்காக மட்டும் உழைப்பதும் உழைத்ததை உண்பதும் இனப்பெருக்கம் செய்வதும் என்று மனித மந்தைகளாக வாழ்ந்தார்கள் என்ற சரித்திரம் உள்ளது ஆனால் அப்படி வாழ்ந்த மக்களின் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது அவர்கள் இப்போது எப்படி வாழ்கின்றார்கள்…
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு!
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை பிரமாண்டமான முறையில் வடக்கில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. வடக்கின்…
அரச சார்பற்ற நிறுனத் தலைவர் ஒருவர் அல் ஹுசெய்னுடன் இரகசிய…
இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் தலைவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக…
கருணா- K.P – பிள்ளையான் – தயா மாஸ்டர் நாட்டை…
2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் மகிந்தரின் பக்கம் இருந்த பல செல்வாக்கு மிக்க தலைவர்கள் எதிர்கட்சிக்கு தாவிட்டார்கள். தற்போது கூட மேலும்சிலர் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். வரும் ஜனவரி மாதம் தேர்தலில் மகிந்தர் தோற்றுப்போனால், அவரை ஏப்பிரல் மாதம்…
ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!…
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும் செயற்றிட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருகிறது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல்…
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்க…
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யாது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்…
எமது தீர்விற்காக நாமே போராடவேண்டும்! கிளிநொச்சியினில் சுரேஸ் எம்பி!!
புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி யாராக இருந்தாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக இந்த நாட்டில் எல்லோருக்கும் இணையாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும். அந்த நிலைமை உருவாக நாங்கள் தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,…
ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் தோற்றால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான அல் ஜசீராவிற்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக அடுத்த ஆண்டு…
யாழில் படையிரின் சோதனை உச்சகட்டம்! அச்சத்தில் மக்கள்
தமிழீழ மாவீரர் தினம் இம்மாதம் 27ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள் அனைத்திலும் படையினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பதுடன், நேற்றைய தினம் தொடக்கம் விசேட அதிரடிப் படையினரின் சோதனை நடவடிக்கைகளும் உச்சக்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டின் பின்னர் வடமாகாணத்தில் நவம்பர் மாதம்…
வன்னியில் வேலியே பயிரை மேயும் நிலையில்: அடக்கு முறையால் தவிக்கும்…
பாரிய யுத்தத்தின் பின் வன்னிப் பிரதேசத்தில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட மக்கள், பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மாற்றானிடன் கையேந்தாமல் வந்தோரை விருந்தோம்பல் செய்த தமிழினம் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த வரலாறு மறக்கப்பட முடியாதது. இளம் பெண் பிள்ளைகள் கூட நடுநிசியில் பயமின்றி றோட்டில் உலாவிய மண் எமது…
ஐ.நா வுக்கு எதிரான நடவடிக்கைகளால் இலங்கை சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படலாம்…
ஐ.நா விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையளாரையும், அவரது அலுவலகத்தையும் தொடர்ச்சியாக மோசமாக சாடிவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் இலங்கை கூடிய விரைவில் சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.நா வின் 69 ஆவது பொதுச் சபையின் சமூக,…
கல்முனை மாநகர சபையில் தமிழர்கள் புறக்கணிப்பு! முஸ்லிம் காங்கிரஸினர் சதி!
கல்முனையில் வாழ்கின்ற சுமார் 30000 இற்கு மேற்பட்ட தமிழர்களின் இருப்பு அபிவிருத்தி மற்றும் நலநோம்பு செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் எனும் வன்மநோக்கத்துடன் நன்கு திட்டமிட்டு முதல்வர் நிசாம் காரியப்பர் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸினர் செயற்படுகின்றனர். தமிழ்ப் பிரதிநிதிகளையும், ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம், மக்களையும் கவலையடைய…