இலங்கையின் இறுதிப் போரில் சர்வதேசம் தனது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை:…

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக்கட்ட காலங்களில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தன என்று அமெரிக்காவின் புதிய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர் மெட்லின் அல்பிரைட் தலைமையிலான 3 அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய…

தோட்டத் தொழிலாளர்களுக்கே தரிசு நிலங்கள் : ஐ தே க

இலங்கையின் மலையகப் பகுதிகளில் தரிசாக உள்ள நிலங்களை வெளியாருக்கு பிரித்துக் கொடுக்காமல் அங்குள்ள தோட்டப்புறங்களில் வேலை செய்யும் மக்களுக்கே பிரித்து கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் இந்தக் கோரிக்கையை…

தமிழ்க் கூட்டமைப்புடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்கையிலுள்ள அந்நாட்டின் தூதர் அலுவலகத்தின் உயரதிகாரிகளும் இருந்தனர். கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிறீதரன் ஆகியோர் பங்குபெற்றனர். பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் வடபகுதியில், போருக்கு பின்னரான…

கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ…

இலங்கை உட்பட்ட நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

இலங்கை உட்பட்ட நாடுகளில் காணாமல் போனோர் தொடர்பில் புதிய மற்றும் எஞ்சியுள்ள முறைப்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நியூயோர்க்கில் கூடிய ஐக்கிய நாடுகளின் பலவந்த நிலையிலான காணாமல் போதல் தொடர்பான குழு, கடந்த 6 மாதங்களில் முறைப்பாடு செய்யப்பட்ட இலங்கை, பாகிஸ்தான்…

வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்

வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். யாழ்.குடாநாட்டில் வடமாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருவதோடு விதி அபிவிருத்தி, புனரமைப்பு, புதிய அரச கட்டிடத்திறப்பு விழா என பல அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளது.…

13வது திருத்தச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கை தொடரும்: இலங்கை அரசாங்கம்

திட்டமிட்டப்படி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அமைச்சர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். இந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல்அமைப்பின் கீழ் சில விடயங்கள், திணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை! தேர்தல் மூலம் மக்கள்…

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் தமிழ் மக்களின் கொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகிற்கு கூறும் ஒரு கருத்துக் கணிப்பாகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலை பார்கின்றோம் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அராலித் தெற்கு…

வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்கே சொந்தமானது!

வடகிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக நிலம் என்றவகையில் வடகிழக்கு மாகாணசபை உள்ளிட்ட அனைத்தையும் ஆட்சி செய்வதற்குறிய உரிமை தமிழர்களுக்கே உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். “கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் ஒருபோதும் ஆட்சிசெய்ய முடியாது” என  ஆளும் கட்சியின் தமிழ்…

வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்: டக்ளஸ்

இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும்…

வடக்கில் தங்க வேட்டை! விடுதலைப் புலிகளின் தங்கம் தேடியலையும் கோத்தபாய…

வடக்கில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள் மற்றும் பெருந்தொகைப் பணத்தை வடமாகாணத் தேர்தலுக்கு முன் கைப்பற்றி விடும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வடக்கை மையமாகக் கொண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுடன்…

முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக…

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18…

பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் பின்னர் பொலிஸ், காணி அதிகாரங்கள் ரத்து

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் பின்னர் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடான பொலிஸ், காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக அரசாங்க…

விடுதலைப்புலிகளின் நிதிச்சேகரிப்பு தொடர்கிறது: இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு அரசாங்கங்கள் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய உறவுகள் குழுவிடம், வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,  இந்த கோரிக்கையை…

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு கோரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளதால் அவர்கள் கருத்துக்கு கூடிய நம்பகத்தன்மை இருக்கும். இதன் காரணமாகவே அவர்களை மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம் என பவ்ரல்…

யாழ் புத்தகக் கண்காட்சி சர்ச்சை

இலங்கை யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, இதனிடையே, இது குறித்து தமிழ் தேசிய அமைப்புகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பால் இந்த முடிவு கைவிடப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்த அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.ஷண்முகம் கருத்து…

முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன்! தமிழர்களின் இன்றைய காலத்திற்கேற்ற தெரிவு: மன்னார்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதன்மை வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மன்னார் ஆயர் மேலும் கருத்து வெளியிடுகையில், விக்னேஸ்வரனைத் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையானது, தமிழினத்…

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் சீராகவில்லை: பிரிட்டன்

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் இன்னும் சீராகவில்லை என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மனித உரிமைகள் சம்பந்தமான சாதக மற்றும் பாதக விடயங்கள் ஒருமித்தே இடம்பெற்றுள்ளன.…

ஆளுனரின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

ஆளுனரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் கூடுதலான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தில்…

சிங்களவர்கள் தொடர்ந்து தமிழர்களுக்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்: யாழ்.ஆயர்…

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சிறுபான்மை மக்களை எரிச்சலூட்டும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் செய்து வருகின்றன என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, ஐரோப்பிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரும் ஆஸ்திரிய நாட்டின் தூதுவருமான ரைமுன் மாஜித்திடம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அவர் யாழ்.ஆயரை சந்தித்துக் கலந்துரையாடினார்.…

யாழ்ப்பாணத்தில் புத்தக விழா! சிங்கள இனவாதிகளுக்கு தமிழ்மொழி மீது அக்கறை…

யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அது குறித்து தங்களது உறுப்பினர்களின் கருத்தறிய வரும் எதிர்வரும் 27ம் திகதி சென்னை தியாகராயர் நகரில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி…

என் 20 வருட கனவை தவிடுபொடி ஆக்கிவிட்டார்கள்: டக்ளஸ் புலம்பல்…

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சராக ஆழும் மகிந்தரின் கட்சி சார்பாகப் போட்டியிட இருப்பவர் தயா மாஸ்டர் ஆவார். இத்தேர்தலில் தம்மையே முதலமைச்சர் வேட்ப்பாளராக மகிந்தர் நிறுத்துவார் என்று நம்பியிருந்திருக்கிறார் டக்ளஸ். ஆனால் அதில் மண் விழுந்தது யாவரும் அறிந்ததே. இன் நிலையில், தான் வடக்கின் முதலமைச்சராக வரவேண்டும் என்று…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரை முகாம்களுக்கு மட்டும் வரையறுத்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. எனினும்,…