“ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் கூட்டத்தைக் கலைப்பதற்கான நடைமுறைகளை” மீறியுள்ளார்

கோலாலம்பூரில் உள்ள துங் ஷின் மருத்துவமனையில் கூடிய பெர்சே 2.0 பேரணிப் பங்கேற்பாளர்களை கலைக்கும் போது போலீஸ் படையின் சீரான செயல் நடமுறைகளை மீறியதாக ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும்…

நஜிப்: “வசிப்பிடக் கட்டுப்பாட்டில்” உள்ள 125 பேருக்கு விடுதலை

வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள 125 பேர் மீதான ஆணை உடனடியாக மீட்டுக் கொள்ளப்படுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். அந்தச் சட்டத்தை அகற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு சமர்பித்த போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார். அந்தச் சட்டத்தின் கீழ் இன்னும்…

சரவாக்கில் தொகுதிப் பங்கீடு குறித்து எதிர்த்தரப்பு இன்னும் உடன்பாடு காணவில்லை

சரவாக்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு குறித்து பிகேஆ-டிஏபி-பாஸ் ஆகியவை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளன. ஆனால் இது வரையில் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.  இவ்வாறு அந்தக் கட்சிகளின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏபி-யும் பிகேஆர்-கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்கள் மீது இன்னும் இணக்கம்…

தேசிய மொழி பயன்பாடு குறித்து லிம்-க்கு ராயிஸ் பதிலடி

தேசிய மொழியை பினாங்கு மாநில அரசாங்கம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டியதற்காக தம்மை பொய்யர் எனக் கூறிய பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு தகவல், பண்பாடு தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் பதிலடி கொடுத்துள்ளார். " நான் உத்துசானைப் போன்று பொய் சொல்வதாக லிம் சொல்வதற்கு எந்தக் காரணமும்…

எம்ஆர்டி சுரங்கப் பாதை விஐபி-யின் வீட்டைத் தவிர்ப்பதற்காக திருத்தப்பட்டது

விஐபி ஒருவருக்குச் சொந்தமான ஒரு சொத்தைத் தவிர்க்கும் பொருட்டு டமன்சாராவுக்கு அருகில் உள்ள எம்ஆர்டி சுரங்கப்பாதையை நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் திருத்தி அமைத்தது குறித்து பக்காத்தான் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ஆணையம் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். தொடக்க நிலைத் திட்டத்தில் எம்ஆர்டி…

‘லிம் குவான் எங் உத்துசானுக்கு எதிராக இனவாதத் தாக்குதலைத் தொடுக்கவில்லை’

"உத்துசான் மலேசியாவில் அவதூறானது எனக் கூறப்பட்ட கட்டுரை வெளியிடப்படுவதற்கு வழி கோலிய குறிப்பிட்ட கருத்துக்கள் எதனையும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிடவில்லை" என்பதை உத்துசான் மலேசியா செய்தி ஆசிரியர் ஒருவர் பினாங்கு உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

மலேசியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததை முஹைடின் ஒப்புக் கொள்கிறார்

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் நாடு இருந்ததா இல்லையா என்ற வாக்குவாதங்கள் தொடரும் வேளையில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தது எனத் தாம் நம்புவதாக இன்று மக்களவையில் கூறியிருக்கிறார். "நாம் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தோமா? ஆம்! நாம் ஆண்டுதோறும் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறோம். அது…

ஒரு மோதிரம் நம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது

"சுங்கத்துறை பாரம் தவறு என நஸ்ரி சொல்லவில்லை என்பதால் அதில் காணப்பட்டுள்ள விவரங்கள் சரியானவை என்றே கருத வேண்டும்." 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி செய்கிறது லூயிஸ்: மலேசியர்கள் இப்போது இருண்ட காலத்தில் வாழவில்லை. இணையம் காரணமாக அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. ஆனால்…

அந்த மசீச அழகிகள் உண்மையான உறுப்பினர்களா?

கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த மசீச இளைஞர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மிகவும் கவர்ச்சியாகத் தோற்றமளித்த ஏழு இளம் பெண்கள் காணப்பட்டனர். அவர்கள் பல பேராளர்களுடைய கவனத்தை ஈர்த்தனர் என்றால் மிகையில்லை. அடுத்த நாள் பல நாளேடுகளில் அந்த எழுவருடைய படங்களும் வெளியிடப்பட்டிருந்தன. ஆண்டுப் பொதுக் கூட்டத் தலைவர் அறிவிப்புச்…

தீர்ப்பை திருடிய நீதிபதி அகற்றப்பட வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சிங்கப்பூர் நீதிபதி ஜிபி செல்வம் வழங்கிய ஒரு நீதிமன்ற தீர்ப்பை திருடியதாக கூறப்படும் மேல்முறையீட்டு நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றுக்கு 60 பக்கத்தான் ரக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். "இது அவரின் (பதில் கூறுவதற்கான உரிமையின் அடிப்படையில் பதில் கிடைக்கும் வரையில்…

ராயிஸின் கருத்துக்கள் ஆபத்தானவை, தவறானவை என்கிறார் லிம்

பினாங்கில் தாம் கலந்து கொள்ளும் அதிகாரத்துவ நிகழ்வு ஒன்றில் ஆங்கிலமும் மண்டரின் மொழியுமே பேசப்பட்டது எனக் கூறியுள்ள தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திமை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். ராயிஸ் "தமது தவறான கருத்துக்கள் மூலம் ஆபத்தான அறிக்கையை" வெளியிட்டுள்ளதாக அவர் சொன்னார்.…

முதலில் சீர்திருத்தங்கள், அடுத்து தேர்தல்கள் இல்லை என்றால் தாக்கத்தை எதிர்கொள்ளுங்கள்…

திடீர் தேர்தல்களை நடத்துவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை முடிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே 2.0 அமைப்பு கூறுகிறது. அரசாங்கம் "நாடாளுமன்ற அமைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அந்த…

‘சைபுல் புஹாரி, அன்வாரை கொள்கை இல்லாதவர் எனக் கருதினார்

அன்வார் இப்ராஹிமை கொள்கை இல்லாத தலைவர் என்றும் தாம் அந்த பிகேஆர் மூத்த தலைவரை வெறுப்பதாகவும் 'மர்ம சாட்சி' என வருணிக்கப்பட்ட முகமட் நஜ்வான் அலி இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். சைபுலின் அரசியல் விசுவாசம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழகத்தில் தம்முடன் ஒன்றாகப் படித்தவரான…

24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை சுங்கத் துறை உறுதி…

பிரதமரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் இருந்ததை அரச மலேசியச் சுங்கத் துறை உறுதி செய்துள்ளது. என்றாலும் இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்த மோதிரம் வாங்கப்படவில்லை என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி  அப்துல் அஜிஸ் விளக்கினார். அவர்…

நிழல் வரவு செலவுத் திட்டம் வாழ்க்கை செலவின உயர்வைக் கட்டுப்படுத்தும்

பக்காத்தான் ராக்யாட் இன்று தனது மாற்று வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துவிட்டதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பது மீது அது கவனம் செலுத்துகிறது. "அந்த வரவு செலவுத் திட்டத்தை திட்டமிடும் போது மக்கள் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து எல்லாவற்றுக்கும் மேலாக அதைக் கருதுவது என்னும்…

பெர்சே 2.0 பேரணியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கு…

கடந்த ஜுலை மாதம் நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியுள்ளார். கோலாலம்பூரில் ஜுலை 9ம் தேதி நடந்த அந்தப் பேரணியை முடக்குவதற்கு 11,000க்கும் போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று…

நஜிப்பை சாட்சியமளிக்க வருமாறு பாரிஸ் நீதிமன்றம் அழைக்கலாம்

அரசாங்க அதிகாரிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தரகுப்பணமாக மில்லியன் கணக்கான ரிங்கிட் கொடுக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் தொடர்பில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பாரிஸ் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை (சபினா) அனுப்பக் கூடும். அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான…

பெர்சே மீதான தடை தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர்

மலேசியாவை 'உலகில் தலை சிறந்த ஜனநாயகமாக' மாற்றுவதற்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு போராடும் பெர்சே 2 என்ற  கூட்டமைப்பு மீதான தடையை அகற்றுவதற்கு எந்தக் காரணத்தையும் அரசாங்கம் காணவில்லை. மக்களவையில் டிஏபி பத்து காஜா உறுப்பினர் போங் போ குவான் தொடுத்த கேள்விக்கு…

நாளை மர்ம நபர் சாட்சியமளிப்பார்

குதப்புணர்ச்சி வழக்கு llல் அன்வார் இப்ராஹிம் பிரதிவாதித் தரப்பு வாதத்தில் நாளை மர்ம நபர் ஒருவர் சாட்சியமளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசு தரப்பும் நீதிமன்றமும் கேட்டுக் கொண்ட போதிலும் அந்த நபருடைய அடையாளத்தைத் தெரிவிக்க பிரதிவாதித் தரப்பு மறுத்து விட்டது. இரசாயனத் துறை தலைமை இயக்குநர் லிம் கொங் பூன்…