முஹைடின்: மலேசியாவைக் குடியரசாக்க டிஏபி முயலுகிறது

அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் பக்காத்தான் ராக்யாட் மீது வெளிப்படையான தாக்குதலை தொடங்கியதின் வழி அம்னோ பொதுப் பேரவை தொடங்கியுள்ளது. பக்காத்தான் செய்வது எல்லாம் மலாய் நலன்களுக்கு எதிரானவை என்று அவர் குற்றம் சாட்டினார். அவர் நேற்றிரவு அம்னோ மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளின் பேரவைகளைக் கூட்டாகத்…

முஹைடின்: 13வது பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியமான தேர்தல்

மலாய்க்காரர்களுடைய ஆட்சியுரிமையை நிலை நிறுத்த என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்குமாறு அம்னோ, தனது மகளிர், இளைஞர், புத்ரி பிரிவுகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வேண்டுகோள் விடுத்த அம்னோ துணைத் தலைவர் முஹடின் யாசின், அம்னோ இப்போது கடுமையான கால கட்டத்தில் இருப்பதாகச் சொன்னார்.…

பிஎஸ்சி பூர்வாங்க அறிக்கை வியாழனன்று தாக்கல் செய்யப்படும்

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் (பிஎஸ்சி) பூர்வாங்க அறிக்கை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கருத்தைச் செவிமடுக்கும் ஆறு நிகழ்வுகளில் இரண்டு முடிந்துள்ளது என்றும் அவற்றில் கிடைத்த பின்னூட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் பிஎஸ்சி தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஒங்கிலி கூறினார். “100-க்கு மேற்பட்ட பரிந்துரைகள்…

“சரியான நேரத்தில்” தெரு ஆர்ப்பாட்ட தடை அகற்றப்படும் என்று எதிர்பார்க்கிறார்…

‘அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதிப்பேரணி மீதான மசோதா தெரு ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டுமொத்த தடை விதித்தாலும் இந்தத் தடைவிதிப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை  தமக்கு இன்னமும் இருப்பதாகக் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரெம்பாவ் எம்பியான கைரி இதனைத் தெரிவித்தார். “அதற்கு இது சரியான…

அமைதியாகக் கூடுதல் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு மணி நேரம் விவாதித்த பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கிறது. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கிறது. குரல் வாக்களிப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது…

கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

இதுவரை காலமும் இலங்கையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள், செம்பருத்தி மற்றும் உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) அன்று இரவு 7 மணிக்கு கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக…

“பினாங்கு சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்கு பண உதவி”

பினாங்கில் உள்ள சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு 60 ரிங்கிட் நிதி உதவி கோரினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் 100 ரிங்கிட் வழங்க மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. மாநில அரசாங்கம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் வழங்க முன்…

“அரசாங்கம் அந்த பொதுக் கூட்ட மசோதாவை அவசரம் அவசரமாக நிறைவேற்ற…

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தன்னிடம் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டு அவசரம் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயலுவதாகத் தோன்றுகிறது என எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அவர் அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அரசாங்கம் வெகு வேகமாக அதனை…

அம்னோ உறுப்பினர்களைக் கொண்டு மட்டும் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்த முடியாது

அம்னோ, 3.4 மில்லியன் பேரைக் கட்சி உறுப்பினர்களாக்கி இருப்பதை வைத்து பொதுத் தேர்தலில் வெற்றி உறுதி என்று அதிகப்படி நம்பிக்கை கொண்டுவிடக்கூடாது. தேர்தல்  வெற்றிக்கு உறுப்பினர்தொகை பெரிதாக இருப்பது மட்டும் போதாது  என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான் கூறினார். “(ஏனென்றால்) 12மில்லியன் வாக்காளரில் நான்கில்…

பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரு முக்கியமான சட்டமுன்வரைவு மீதான விவாதத்தின்போது அவைத் தலைவர் -கட்சிக்கு ஒருவராக- மூன்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளித்ததை அவர்களால்…

உரிமைக்கான ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்வூர்வலம் பகல் 12.19க்குத் தொடங்கியது. வழக்குரைஞர்கள் ஊர்வலம் செல்லும் வழியில் கருப்பு உடை அணிந்த…

மனித உரிமை அமைப்பு: வழக்குரைஞர் பேரணியை அனுமதிப்பீர்

பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ஒன்று, இன்று வழக்குரைஞர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள ஊர்வலம் தங்குதடையின்றி நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நியு யோர்கில் தளம்கொண்டுள்ள அந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, வழக்குரைஞர்கள் “உரிமைக்கான ஊர்வலம்”  வழி சில கருத்துகளைத் தெரியப்படுத்த விரும்புகிறார்கள் என்று கூறியது. “அமைதிப்…

அரசாங்கம் பொதுக் கூட்ட மசோதாவுக்கு திருத்தங்களை முன்மொழிகிறது

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கான திருத்தங்களை இன்று பிற்பகல் சமர்பிக்கும். அந்த மசோதா மீது குழு நிலையில் விவாதங்கள் நிகழும் போது அவை தாக்கல் செய்யப்படும். அந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.…

கேஎல் போலீஸ்: ‘உரிமைக்கான ஊர்வலம்’ சட்டவிரோதமானது

மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று ஏற்பாடு செய்துள்ள சட்டவிரோத ‘உரிமைக்கான ஊர்வல’த்தில் கலந்துகொள்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே எச்சரித்துள்ளார். அதற்கு போலீஸ் சட்டத்தின்கீழ் அனுமதி பெற வேண்டும். வழக்குரைஞர் மன்றம் அனுமதிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று சாலே தெரிவித்ததாக சீன நாளேடான…

பூமலையில் வழக்குரைஞர்கள் குவிகிறார்கள்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக பூமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். Read More

அம்னோ பொதுப் பேரவை இன்று பிற்பகல் தலைவர் செய்தியுடன் தொடங்குகிறது

2011ம் ஆண்டு அம்னோ பொதுப் பேரவை, இன்று பிற்பகல் பேரவைக்கு முந்திய மன்றக் கூட்டத்துடன் தொடங்குகிறது. அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பேராளர்களுக்கு முக்கியமான செய்தியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 13வது பொதுத் தேர்தலுக்கு அம்னோ தயாராவதற்கு மிக முக்கியமான செய்தியாக தலைவர் உரை…

குழப்பம் ஏதுமில்லை, பிரதமருடைய நோக்கம் தெளிவானது

'போலீசாருக்கு விருப்பம் போல் முடிவு செய்யும் உரிமை, மக்கள் உரிமை- அந்த இரண்டு கோட்பாடுகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ?' அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது எழுந்த 'குழப்பத்தை' நஜிப் தெளிவுபடுத்துகிறார் மஞ்சித் பாட்டியா: பிரதமர் நஜிப் ரசாக் சொல்கிறார்: நாங்கள் உலகம் முழுவதையும் சார்ந்த…

“ஆக்கிரமிப்பு” இயக்கம் நாடாளுமன்றத்தை தட்டுகிறது

உலகளவிலான ஆக்கிரமிப்பு இயக்கத்தை நாடாளுமன்றத்தின் வாசலுக்குக் கொண்டுவர ஓர் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) தொடங்கவிருக்கும் அமைதியாக கூடுதல் சட்ட மசோதா 2011 மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கமாகும். நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர், மக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை…

மகாதிர்: அரேபிய வசந்தம் மலேசிய கரையை வந்தடையாது

மத்தியக் கிழக்கு பாணியிலான சமீபகால கிளர்ச்சி மலேசியாவுக்கு பரவும் சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். ஏனென்றால், பிரதமர் நஜிப்பின் தலைமையிலான மக்களின் தேவையறிந்து செயல்படுவதற்கு கடுமையாக உழைத்து வருகிறது என்று செய்தியாளர்களிடம் இன்று கூறினார். "மக்களின் பிரச்னைகள் மீது அரசாங்கம் கவனம்…

பக்கத்தானுடன் கூட்டு: அலியாஸ் எம்டியுசியை பிரநிதிக்கவில்லை

தொழிலாளர் சட்டங்களுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் "போர் தொடுக்க" தயாராக இருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) மிகத் தீவிரமாக மறுத்துள்ளது. "இந்த அறிக்கையில் நிச்சயமாக உண்மை இல்லவே இல்லை. அது காங்கிரஸ்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையைப் பிரதிநிதிக்கவில்லை", என்று அக்காங்கிரஸ்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம்…

மோதலாமா, நோர் முகமட்?

ஐந்து நெடுஞ்சாலைகள் ஒப்பந்தங்கள் மீதான மாற்றங்கள் குறித்து பிரதமர்துறை அமைச்சர் நோர் முகமட் யாகோப் கூறியிருந்த கருத்துகள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அவரை பொதுமேடை விவாதத்திற்கு வருமாறு சவால் விட தூண்டியுள்ளது. இரு நெடுஞ்சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு சாலைக் கட்டண உயர்த்தாமல் இருப்பதற்கு  ஈடாக கட்டணம்…

அமைதியாகக் கூடுதல் தொடர்பில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க நஜிப் விளக்கம்

அமைதிப்பேரணி மசோதா கொடூரமானது என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எல்லாரும் குறைகூறுவதைப்போல் அல்லாமல் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுக் கூட்டங்களைக் குறுகிய காலத்தில்கூட நடத்த முடியும் என்றார். “அமைதிக்கான கூடுதல் மசோதா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடுவதாக இருந்தால் போலீசிடம் தெரிவித்து விட்டால் போதும், அடுத்து…

பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதாவுக்கு எதிராக அமைதியாக நடந்த கண்டனக்கூட்டம்

நேற்று பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதவை எதிர்க்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது.போலீசார் தலையீடின்றி அது அமைதியாக நடந்து முடிந்தது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  மனித உரிமைக் குழுவான சுவாராம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வு பினாங்கின் புகழ்பெற்ற பேச்சாளர் மூலையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள் (எம்பிபிபி),…