இன ரீதியான பிரச்சனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, இந்திய சமூகமும் மலேசியாவிலுள்ள இதர சிறுபான்மையினரும் தற்காப்பு நிலையில் இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வலியுறுத்தியுள்ளார். நேற்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற மன்றம் ஒன்றில்…
‘பங்குச் சந்தையில் பதிவுபெற்ற சில நிறுவனங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிக்கு…
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போர் பட்டியலில் பங்குச் சந்தையில் பதிவுபெற்ற சில நிறுவனங்களும் இருப்பது தெரிய வந்திருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் அவை அரசாங்கக் குத்தகைகள் பெறுவதற்கும் முனைவதைச் சுட்டிக்காட்டிய அவர் அவற்றைக் கபடதாரிகள் எனச் சாடினார். “யாரையும் …
பயணத்தடையை எதிர்த்து வழக்காட மரியா சின்னுக்கு நீதிமன்றம் அனுமதி
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வழக்காட பெர்சே தலைவர் மரியா சின்னுக்கு அனுமதி வழங்கியது. பயணத் தடையை நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்ற மரியா சின்னின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதி ஹஸ்மத் நிக் முகம்மட் தீர்ப்பளித்தார். “அவரது விண்ணப்பம் அடாவடித்தனமானதோ விளையாட்டுத்தனமானதோ …
ஜேபி சுல்தானா அமினா மருத்துவமனையில் தீ: அறுவர் பலி
இன்று காலை ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் மூண்ட தீயில் அறுவர் இறந்துகிடக்கக் காணப்பட்டதைத் தீயணைப்பு, மீட்புத்துறை உறுதிப்படுத்தியது. “தீயில் அறுவரை மீட்டெடுத்தோம்- ஒருவரை உயிருடன் ஐவரைப் பிணமாக. “மேலும் ஒருவர் தீயில் சிக்கிக்கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன”, என அத்துறை டிவிட்டரில் கூறியிருந்தது. பின்னர் …
பட்ஜெட் விவாதத்தின்போது டிஓஜே தொடர்பான கேள்விகளுக்கு ஒட்டுமொத்த தடை இல்லை
2017 பட்ஜெட் மீதான விவாதங்களின்போது அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) வழக்கு தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது கேட்கப்படும் கேள்விகளை வைத்தே முடிவு செய்யப்படும். பூச்சோங் டிஏபி எம்பி கோபிந்த் சிங் டியோ, டிஓஜே வழக்கு தொடர்பில் 33 வாய்மொழிக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது அவற்றுக்குப் பதிலளிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் …
நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலிடுவது கூடாது- தெங்கு ரசாலி
அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, பெர்சே இயக்கத்துக்குப் பண உதவி செய்யும் நிறுவனங்களைக் கருப்புப் பட்டியலிட வேண்டும் எனக் கூறப்படுவதை நிராகரிக்கிறார். “அது சரியல்ல என்பது என் கருத்து”, என்று குவா மூசாங் எம்பி தெரிவித்தார். இன்று கோலாலும்பூர் லேக் கிளப்பில் ‘அம்னோ முடிவுக்கு வருகிறதா?’…
கிழக்குக் கரை இரயில் தடம் தங்கத்திலா கட்டப்படுகிறது? மாபுஸ் கேள்வி
கிழக்குக் கரை இரயில் தட (இசிஆர்எல்) திட்டத்துக்கு ரிம55 பில்லியன் செலவிடப்படுவதை ஆராய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என பாஸின் பொக்கோ சேனா எம்பி மாபுஸ் ஒமார் கூறினார். அது மக்களுக்கு நன்மையளிக்கும் ஒரு திட்டம் என்றாலும் அதன் தொடர்பில் பல கேள்விகள் எழுவதாக அவர் …
அன்வார் இப்ராகிம் ரிம100,000 கொடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
வெளியுறவு அமைச்சர் அனிபா அமினுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பில் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றம் வழக்குச் செலவாக ரிம100,000 கொடுக்கும்படியும் அவருக்கு உத்தரவிட்டது. அம்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி உமி கல்சோம் …
பெர்சத்து அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்க எதிரணியினர் இடங்கொடுக்க மாட்டார்கள்
பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றாலும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வால் அம்னோவைப் போல் அரசாங்கத்தை வழிநடத்த இயலாது. ஏனென்றால் முகைதின் யாசின் தலைவராகவுள்ள பெர்சத்து அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையைப் பெற்றிருக்காது என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா. அவ்வளவு ஏன் அது, அடுத்த பொதுத் …
சித்தி காசிமும் நண்பர்களும் ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வழக்குரைஞர் சித்தி காசிமும் ஐந்து நண்பர்களும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூடினர். அக்குழுவினர் “சட்டம் 355-ஐ நிராகரிப்பீர். நான் ஒரு முஸ்லிம். ஆனால் அதை நான் ஆதரிக்கவில்லை” என்ற வாசகங்களைக் கொண்ட அற்விப்பு …
அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால், பதவி விலகுங்கள், ஜாசா சொல்கிறது
அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் (ஜாசா) வியூகத் தொடர்புத்துறை இயக்குநர் துன் பைசால் இஸ்மாயில் அஸிஸ் கூறினார். "நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு நல்ல அரசு ஊழியராக இருக்க முடியாது என்றால், தயவு செய்து ராஜினாமா செய்யுங்கள்.…
மரியா, “இசிக்கு எதிரான பொய்களை நிறுத்துங்கள்”, தேர்தல் ஆணையத்தின் தலைவர்…
தேர்தல்கள் நேர்மையாக நடக்கின்றன, அது பெர்சேயிக்குத் தெரியும் என்கிறார் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர். மலேசியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்று தொடர்ந்து கூறிய வரும் நேர்மையான தேர்தல் வேண்டும் என்று கோரிவரும் பெர்சே அமைப்பை மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கடுமையாக விமர்சித்தார்.…
பெர்சே ஏற்பாதரவாளர்களை அரசாங்கம் கருப்புப் பட்டியலில் போட வேண்டும், உத்துசான்…
தேர்தல் சீர்திருத்தம் கோரும் பெர்சேயிக்கு நிதி உதவி அளிக்கும் வணிகங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உத்துசான் மலேசியா புத்ராஜெயாவை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று அவாங் செலமாட் எழுதியுள்ள கட்டுரையில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை அகற்ற முயற்சிக்கும் ஓர் அமைப்பை வணிகங்கள் ஆதரிப்பது தவறாகும் என்று…
மகாதிரின் கையில் துப்புவேன், ஜமால் யூனுஸ்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் கையை குலுக்கி முத்தமிட்டதற்கான தாம் வருத்தப்படுவதாக சிவப்புச் சட்டை கும்பலின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறுகிறார். இப்போது அவரைச் சந்தித்தால் அவரது கையில் துப்புவேன் என்று ஜமால் அவரது ஆதரவாளர்களிடம் இன்று காப்பாரில் நடந்த ஒரு பெர்சே எதிர்ப்பு பேரணியில்…
ஜோகூரில் பெர்சே வாகன அணியை சிவப்புச் சட்டையினர் சிறுது நேரத்திற்கு…
ஜோகூர், பத்துபகாட்சிலிருந்து மூவாருக்கு புறப்பட்ட பெர்சே 5 வாகன அணியை சிவப்புச் சட்டையினர் சிறிது நேரத்திற்கு தடுத்து நிறுத்தினர். இது முகநூலில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட வீடியோவிலிருந்து தெரிகிறது. அந்தப் பதிவு ஒன்றில், "தயவு செய்து, திரும்பிப் போங்கள். இங்கு நாங்கள் பெர்சேயை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று சிவப்புச்…
பெர்சே 5 பேரணியில் பங்கேற்கிறார் பாதிரியார்
மலாக்கா மற்றும் ஜோகூர் கத்தோலிக்க மாவட்ட பாதிரியார் பெர்னட் பால் நவம்பர் 19 இல் நடைபெறவிருக்கும் பெர்சே பேரணி 5 இல் பங்கேற்கப் போவதாக சூளுரைத்துள்ளார். பெர்னட் பால் முகநூல் வழியாக மக்களை பெர்சே 5 பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுகொண்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்பாதிரியார் கடந்த ஆண்டு…
நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று பண்டிகார் கூறுவது சுத்த அபத்தமாகும்- முன்னாள்…
1எம்டிபி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறியிருப்பது சட்டப்படி சரியல்ல என்கிறார் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம். “அதை விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. “எது எப்படியோ, அமைச்சரின் மறுமொழி டிஓஜே வழக்கில் ஒரு கேள்விப்பட்ட …
பாஸ்: பெர்சே போராட்டம் திசைமாறி விட்டது
பெர்சே 5 ஏற்பாட்டாளர்கள் பெர்சே எந்த நோக்கத்துக்காக போராட்டத்தைத் தொடங்கியதோ அந்த நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய் விட்டதாக பாஸ் கட்சி கூறியது. பெர்சே 4 பேரணியின்போது பேரணி பங்கேற்பாளர்கள் தேசியத் தலைவர்களின் உருவப்படங்களைக் காலால் மிதித்ததை எண்ணி பாஸ் வெறுப்படைவதாக அக்கட்சித் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.…
ஐஜிபி: பெர்சேமீது போர் என்று ஜமால் அறிவித்திருப்பது ‘வெறும் வாய்ச்சொல்தான்’
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், பெர்சேமீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்திருப்பதை “வெறும் வாய்ச்சொல்”தான் என்று நினைக்கிறார் இஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். அதை ஒரு அச்சுறுத்தல் என்று நினைப்போர் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம் என்றார். “அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் …
டிபிபிஎ-க்கு ஆதரவா?, பிஎஸ்எம் எம்டியுசியைச் சாடியது
டிபிபிஎ என்ற டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரசை (எம்டியுசி) தொழிலாளர்களின் அவலநிலையை கைவிட்டுவிட்ட ஒரு பலவீனமான அமைப்பு என்று மலேசிய சோசியலிசக் கட்சி (பிஎஸ்எம்) குற்றம் சாட்டிள்ளது. தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது டிபிபிஎயின் கட்டாயக் கடப்படாக இருப்பதால் எம்டியுசி அதனை…
பெர்சே பேரணிக்கு பாஸ் கட்சியினரைக் கவர்ந்திழுக்க நிக் அசிஸ் பெயரைப்…
பார்டி அமனா நெகரா (அமனா), பெர்சே பேரணியில் பாஸ் கட்சியினர் கலந்துகொள்வதை ஊக்குவிக்க அக்கட்சியின் முன்னாள் ஆன்மிகத் தலைவர் நிக் அசீஸ் நிக் மாட்டின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, நவம்பர் 19 பெர்சே பேரணியில் பாஸ் …
நீதித்துறையின் சுதந்திரத்தைக் காப்பீர்: சிலாங்கூர் சுல்தான் நீதிபதிகளுக்கு அறிவுறுத்து
நீதிபதிகளும் நீதித்துறை அதிகாரிகளும் நீதித்துறையின் நேர்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எப்போதும் பாடுபட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார். நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும் அப்போதுதான் அவர்கள் நீதித்துறையையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிப்பார்கள் என்று சுல்தான் கூறினார்.…
சாபாவில் மேலும் 19பேர் கைது; ரிம2.4 மில்லியன் பறிமுதல்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சாபா நீரளிப்புத் துறை விவகாரம் தொடர்பில் புதிதாக 19 பேரையும் ரிம2.4மில்லியன் ரொக்கத்தையும் கைப்பற்றியிருப்பதாக சைனா பிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைதும் சொத்துப் பறிமுதலும் நடந்திருப்பதாக அந்த நாளேடு கூறிற்று. அடையாளம் தெரிவிக்கப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சைனா …
ரபிசிக்கு எதிரான கைருல் அஸ்வானின் அவதூறு வழக்கு தள்ளுபடி
மாராவில் நிதி மோசடி நிகழ்ந்திருக்க சாத்தியம் உண்டு என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லிக்கு எதிரான அம்னோ துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனின் அவதூறு வழக்கை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ரபிசி ஒரு கணிப்பைச் செய்து அதன் அடிப்படையில்தான் அவ்வாறு …


