இன ரீதியான பிரச்சனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, இந்திய சமூகமும் மலேசியாவிலுள்ள இதர சிறுபான்மையினரும் தற்காப்பு நிலையில் இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வலியுறுத்தியுள்ளார். நேற்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற மன்றம் ஒன்றில்…
“இரத்தத்தில் அமிழ்த்துவேன்” என்று ஜமால் கூறியதும் வெறும் சொற்கள்தானா?, ஐஜிபி…
சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் "இரத்தத்தில் அமிழ்த்துவேன்" என்று கூறியிருந்த கருத்துக்காக அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா அல்லது ஒன்றுமில்லை என்று விட்டுவிடப்படுவாரா என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கேட்கப்பட்டுள்ளார். "இரத்தத்தில் அமிழ்த்துவேன்" என்று ஜமால் கூறியிருந்த…
மரியா சின் சாபாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா துண்டுப் பிரசுரங்களை லாங்கூன், கோத்தா மருடுவில் விநியோகம் செய்ததற்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று பெர்சே அதிகாரி ஒருவர் டிவிட்டர் செய்துள்ளார். விசாரிக்கப்படுவதற்காக கோத்தா மருடு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பெர்சே துண்டுப்…
அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்தியதாக முகைதின் மீது போலீஸ் புகார்
1எம்டிபி சம்பந்தப்பட்ட "அரசாங்க இரகசியங்களை" வெளிப்படுத்தியதாக முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஜாரிங்கான் மெலாயு மலேசியா (ஜேஎம்எம்) தலைவர் அஸ்வான்டின் ஹம்சா செய்துள்ள புகாரில் முகைதின் யாசின் இரண்டு சம்பவங்களில் - இவ்வாரம் நாடாளுமன்றத்தில் மற்றும் இம்மாத தொடக்கத்தில் ஒரு…
1எம்டிபி விவகாரம்: சுவிஸ் ஏஜி உதவி கோரியிருப்பதை அபாண்டி உறுதிப்படுத்தினார்
சுவிட்ஸர்லாந்து சட்டத்துறை தலைவர் (ஒஎஜி) பண மோசடி மற்றும் நாணயச் சலவை ஆகியவற்றில் 1எம்டிபி சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் பரஸ்பர சட்ட உதவி திட்டத்தின் கீழ் மலேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் உதவி கோரியிருப்பதை மலேசிய அட்டர்னி ஜெனரல் முகம்மட் அபாண்டி அலி உறுதிப்படுத்தினார். மலேசிய எஜியிடமிருந்து சுவிஸ் எஜி…
நவம்பர் 19 பேரணி: பெர்சே போலீசுக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது
போலீசிடம் பெர்சே அதன் நவம்பர் 19 பேரணிக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது. சிகப்புச் சட்டையினர் அதே நாளில் வேறொரு பேரணி நடத்துவதற்கு போலீசிடம் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு தாக்கல் செய்துள்ளனர். போலீஸ் தலைமையகம் புக்கிட் அமானிலும் டாங் வாஙி மற்றும் பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ்…
‘கபடதாரிகள்’, பிஎன் எம்பிகளைச் சாடினார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராகக் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது என்பதைக் காரணம்காட்டி அவரை விடாப்பிடியாக ஆதரிக்கும் பிஎன் எம்பிகளைக் கபடதாரிகள் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விளாசினார். நஜிப்பை எந்தக் குற்றத்துக்காகவும் குற்றம் சாட்ட முடியாது என்பதை அம்னோ, மசீச உள்பட பிஎன்னில் …
ஜமால்: பெர்சே பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க 300,000 சிவப்புச் சட்டையினர்
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், நவம்பர் 19 பெர்சே பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சிவப்புச் சட்டை இயக்கத்தின் 300 ஆயிரம் பேர் ஒன்றுதிரள உறுதி அளித்துள்ளதாகக் கூறிக் கொள்கிறார். அது உண்மையாயின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத பெர்சே பேரணிக்குக் கூடிய கூட்டத்தைவிட அது …
ஐஜிபி: சிவப்புச் சட்டையினர் தெரியப்படுத்தினார்கள்; பெர்சே இன்னும் இல்லை
நவம்பர் 5-இல் டட்டாரான் மெர்டேகாவ்ல் பேரணி நடத்தப்போவது குறித்து சிவப்புச் சட்டை இயக்கத்திடமிருந்து அறிவிக்கை கிடைத்திருப்பதாக போலீஸ் தெரிவித்தது. அப்பேரணியின் நோக்கத்தை அறிய போலீசார் அவர்களை அழைத்து விசாரிப்பார்கள் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். எந்தத் தரப்பும் அமைதிப் பேரணிச் சட்டத்தின்படி பேரணி …
எச்எஸ்ஏ அவசரப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுகிறது
சுல்தானா அமினா மருத்துவமனை( எச்எஸ்ஏ)யின் அவசரச் சிகிச்சைப் பிரிவு இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுகிறது. மருத்துவமனையின் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள அவசரப் பிரிவு நேற்று தொடங்கிக் கட்டங்கட்டமாக மூடப்பட்டு வருகிறது. “மறு அறிவிப்பு வரை சுல்தானா அமினா மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மூடப்படுகிறது. அவசரத்துக்கு, தயவு …
தற்காலிக நீர் விநியோக நிறுத்தம் நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் நவம்பர் முதல் நாள் போர்ட் டிக்சன், சிரம்பான், ரெம்பாவ், கோலா பிலா, ஜெலாய் வட்டாரங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படாது. அது நவம்பர் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இந்த ஒத்திவைப்பால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு ஆயர் நெகிரி செம்பிலான் சென்.பெர்ஹாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. சுங்கை லிங்கி, ஜெலாய் நீர் …
கைருடின் பெர்சத்துவிலிருந்து வெளியேறினார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரின் துணிச்சலான ஆதரவாளர் கைருடின் அபு ஹசான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)விலிருந்து விலகிக் கொண்டுள்ளார். பெர்சத்துவிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால் அவர் அக்கட்சியில் சேரப்போவதில்லை பல தடவைகளில் கூறியுள்ளார். அவர் எப்போது…
பெர்சே 5 பேரணி டட்டாரான் மெர்டேகாவில்
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே கூட்டமைப்பு அதன் ஐந்தாவது பேரணியை நவம்பர் 19-இல் டட்டாரான் மெர்டேகாவில் நடத்தும் என அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார். சிகப்புச் சட்டை இயக்கத்தினரும் பினாங்கு அம்னோ இளைஞர்களும் பேரணியை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் பெர்சே பேரணியை நடத்துவதில் …
யுனிசெப்: சீரியாவில் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார் பலி
சீரியாவின் வடமேற்கில் ஒரு பள்ளிக்கூடம் அருகில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 22 பேர் சிறார்கள் என ஐநா சிறுவர் நிதி நிறுவன(யுனிசெப்)த் தலைவர் ஆலன் லேன் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் ஆறு ஆசிரியர்களும் உள்ளிட்டிருந்ததாக அவர் சொன்னார். அதேவேளை சீரிய மனித உரிமை கண்காணிப்பு மையம் அத்தாக்குதலில் மொத்தம் …
மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்த தாயிடம் போலீஸ் விசாரணை
பள்ளிக்கூடம் செல்ல மறுத்த மகளை ஒரு தாயார் இரும்புச் சங்கி கொண்டு விளக்கு கம்பத்தில் கட்டிப்போடப்பட்டதாக நம்பப்படும் விவகாரம்மீது போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. எட்டு வயது இந்திய பள்ளிமாணவி பள்ளி உடையணிந்த நிலையில் விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டுள்ள செய்தி கிடைத்ததும் மோட்டார்-சைக்கிள் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து …
மின்கம்பிகளில் ஏற்பட்ட தீப்பொறிகளே மருத்துவமனை தீ விபத்துக்குக் காரணமாம்
ஜோகூர் பாரு சுல்தானா மருத்துவமனை(எச்எஸ்ஏ) தீவிர கவனிப்புப் பிரிவின் தீ விபத்துக்கு மின்கம்பிகளில் ஏற்பட்ட தீப்பொறிகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதே காரணத்தால்தான் அடுத்த நாள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை பிரிவில் மின்கசிவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையைப் பராமரிக்கும் பொறுப்பு பந்தாய் மெடிவெஸ்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதார …
மெடிவெஸ்ட் நிறுவனத்துக்கு இப்போதைக்குத் தடையில்லை
சுல்தானா அமினா மருத்துவமனை(எச்எஸ்ஏ) தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் மெடிவெஸ்ட் நிறுவனத்துக்குத் தடை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. மெடிவெஸ்ட் நிறுவனம் ஜோகூரில் மேலும் 12 மருத்துவமனைகளுக்கும் நெகிரி செம்பிலானில் ஆறுக்கும் மலாக்காவில் மூன்று மருத்துவமனைகளுக்கும் பராமரிப்புச் சேவைகளை வழங்கி …
இப்போது, குவான் எங்கிற்கு எதிராக 1000 கருப்புச் சட்டையினர் பேரணி…
இன்று பிற்பகல், சுமார் 1000 கருப்புச் சட்டை அணிந்திருந்த இளைஞர்கள் பினாங்கு அம்னோ கட்டடத்திலிருந்து கோம்தாருக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பதவி துறக்க வேண்டும் அல்லது விடுப்பில் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விட்டனர். பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவுத்…
ரிம2.50 என்ற சமையல் எண்ணெய் விலையில் மாற்றமில்லை
மாறுபட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் சமையல் எண்ணெய் விலையில் எந்த மாற்றமுமில்லை. அது பழைய விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும். இதனை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் இன்று புத்ரா ஜெயாவில் அறிவித்தார். சிறப்பாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அமைச்சர், “சமையல் எண்ணெய் …
பிகேஆர் எம்பி-இன் சேவை மையத்தில் சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டது
நேற்றிரவு குவாந்தான் பிகேஆர் எம்பி புசியா சாலேயின் சேவை மையத்தின்மீது யாரோ சிவப்புச் சாயத்தை வீசியடித்திருந்தனர். அது பெர்சே-எதிர்ப்பாளர்களின் செயலாக இருக்கலாம் என்றவர் நினைக்கிறார். இரவு மணி 11.36க்கு மோட்டார்சைக்கிள் தலைகவசம் அணிந்த இருவர் சாயத்தை வீசியடிப்பதைக் சிசிடிவி படங்கள் காண்பிப்பதாக அவர் தெரிவித்தார். “அது ஒரு மிரட்டலாக …
6,000-க்கு மேற்பட்ட ஜிஎல்சி, எம்கேடி ஊழியர்கள் இவ்வாண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்
அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களிலும் (ஜிஎல்சி) அரசாங்கத்தின் துணை நிறுவங்களிலும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாண்டு வேலை இழந்தனர். இவர்களில் 5134 பேர் ஜிஎல்சிகளைச் சேர்ந்தவர்கள் என நிதி அமைச்சு கூறியது. மலேசிய விமான நிறுவனத்திலிருந்து 4,682 பேர் பணிநிறுத்தம் செய்யப்பட்டனர். அந்நிறுவனம் மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்(எம்ஏபி) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட …
அவைத் தலைவரே, நீர் எம்ஒ1- றால் நியமிக்கப்பட்டவர், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,…
டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தாம் நாடாளுமன்ற சிறப்பு அறையிலிருந்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியேற்றப்பட்டதாக கூறினார். கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவாதத்தில் தமது பேச்சை தொடங்குவதற்கு முன்னதாகவே தம்மை அவைத் தலைவர்…
நஜிப் பட்ஜெட் விவாதத்துக்குக் காத்திருக்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்வரை காத்திருக்கவில்லை. அமைச்சர்களின் கேள்வி நேரத்தில் சில கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர் புறப்பட்டுச் சென்று விட்டார். ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனை தீ விபத்து அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால். கடந்த காலத்திலிருந்து …
‘புடைத்துக் கிடக்கும் அரசாங்கச் சேவையைக் குறைக்க இயலாது’
2017 பட்ஜெட்டில் 36 விழுக்காடு அரசாங்க ஊழியர் சம்பளத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால்கூட அரசாங்க ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா. அவர்களின் எண்ணிக்கையைக் …


