இன ரீதியான பிரச்சனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, இந்திய சமூகமும் மலேசியாவிலுள்ள இதர சிறுபான்மையினரும் தற்காப்பு நிலையில் இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வலியுறுத்தியுள்ளார். நேற்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற மன்றம் ஒன்றில்…
சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்படுவதால், எண்ணெய் விலை கூடப்போகிறது
பல்வேறு வகையான சமையல் எண்ணெய்களின் விலை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக மலாயா சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மன்றம் கூறுகிறது. எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்பட விருப்பதால் எண்ணெய் விலை ஏற்றம் காணப் போகிறது என்று ஓரியண்டல் டெய்லியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் விலை ஏற்றம் பற்றிய…
அவர் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது: மகாதிரைச் சாடினார் நஸ்ரி
டாக்டர் மகாதிர் முகம்மட் தம் அறிவீனத்தைக் காண்பித்துக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். அரசாங்கத்திடம் பணமில்லை அதனால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது என்று மகாதிர் கூறியிருப்பதற்கு நஸ்ரி இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார். “அரசாங்கத்திடம் பணம் இல்லை …
குளிர்காலத்தால் எம்எச்370 தேடும் பணி இரண்டு மாதங்கள் தாமதமாகும்
குளிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இரண்டு மாதங்கள்வரை தாமதமாகலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த போயிங் 777, 2014 மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் பறந்து கொண்டிருந்தபோது மாயமாக மறைந்தது. கிட்டத்தட்ட …
பிரதமர்துறையின் செடிக் மற்றும் சீட் அமைப்புகளை ம.இ.கா சீண்டக் கூடாது
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 19, 2016. இந்திய மக்களின் சமுதாய-பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புக்களின் வழி நிதி ஒதுக்கீடு செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து கருத்துரைத்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் துணை அமைச்சருமான தேவமணி …
ஷாபி ஹுடுட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்
பார்டி வாரிசான் சாபா (வாரிசான்) தலைவர் ஷாபி அப்டால், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று கூறினார். “நான் வாக்களிக்க மாட்டேன், அதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்”, என்று ஷாபி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விசயத்தில் சரவாக்கின் …
பெர்சேக்கு மரண எச்சரிக்கை விடுத்தோர் குறித்து தகவல் தெரிவித்தால் ரிம10,000…
பெர்சே செயலக உறுப்பினர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பாணியில் மரண எச்சரிக்கை விடுத்தோர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரிம10,000 சன்மானம் கொடுக்க டிஏபி எம்பிகள் சிலர் முன்வந்துள்ளனர். பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அதன் செயலாளர் மந்திப் சிங் ஆகியோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல் …
டூபாயிலிருந்து திரும்பிய ஜமால் கேஎல்ஐஏ-இல் கைது
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், கைது செய்யப்பட்டு நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை அவரின் செயலாளர் டூரானி இஸாம் உறுதிப்படுத்தினார். வெளிநாடு சென்றிருந்த ஜமால் நாடு திரும்பிய உடனேயே விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார், இரண்டு வாரங்களுக்குமுன் சாபாக் பெர்னாமில் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கும் …
மகாதிர்: புத்ரா ஜெயாவிடம் பணமில்லை என்பதால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள 2017 பட்ஜெட், தேர்தல் திடீரென்று நடத்தப்படலாம் என்ற வதந்தி அடிபடுவதால் ஒரு தேர்தல் பட்ஜெட்டாக அமையலாம் என்று ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாக்டர் மகாதிர் முகம்மட் இந்த பட்ஜெட்டே அர்த்தமற்றது என்கிறார். அரசாங்கக் கருவூலம் பணமின்றி …
மரியா “உனது தலையை வெட்டி யுடியூப் வழி பரப்புவேன்”, மலேசிய…
தமக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தவர்கள் தமது மூன்று மகன்களின் மைகாட் பிரதிகளையும் அனுப்பியுள்ளனர் என்று மரியா கூறினார். அவர்களுக்கு எப்படி இந்தப் படங்கள் கிடைத்தன என்பது தமக்குத் தெரியாது என்று கூறிய மரியா, இது அவர்கள் எவ்வளவு துணிச்சல்காரர்கள் என்பதை காட்டுகிறது என்றார். "அவர்கள் இஸ்லாத்தின்…
அடினான் கைங்கரியத்தால் வாட்சன் நியாம்பெக்குக்கு வீடு கிடைத்தது
முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரர் வாட்சன் நியாம்பெக் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பியுள்ளது. 18 ஆண்டுகளாக மலேசியாவின் அதிவேக வீரராக திகழ்ந்தவர் வாட்சன். அவரது சாதனை இந்த ஆண்டுதான் முறியடிக்கப்பட்டது. 'பறக்கும் டயாக்' என்று போற்றப்பட்டவர் அவர். ஆனால், பெயர் இருந்து என்ன, குடியிருக்க சொந்த வீடு இல்லை அவருக்கு. …
முன்னாள் எப்ஏஎம் அதிகாரி: நஜிப் எப்ஏஎம் தலைவராக வெண்டும்
மலேசிய கால்பந்து சங்க(எப்ஏஎம்)த்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எப்ஏஎம் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக உத்துசான் ஆன்லைன் அறிவித்துள்ளது. தெங்கு அப்துல் ரஹ்மான், அப்துல் ரசாக் ஆகிய முன்னாள் பிரதமர்கள் எப்ஏஎம் தலைவர்களாக இருந்ததுண்டு என்று ராஜா அஹமட் சைனுடின் ராஜா …
மலாக்கா சிஎம்: மலாய் ஆட்சியாளர்கள் குடிமக்கள் பிரகடனத்தை நிராகரித்தார்கள்
டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அவரின் கூட்டாளிகளும் உருவாக்கி ஒப்படைத்த குடிமக்கள் பிரகடனத்தை ஆட்சியாளர் மன்றம் நிராகரித்து விட்டதாக மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் கூறிக்கொள்கிறார். இட்ரிஸ் கடந்த வாரம் நடந்த ஆட்சியாளர் மன்றக் கூட்டத்துக்கு மலாக்கா ஆளுனர் முகம்மட் காலில் யாக்கூப்புடன் சென்றதாகவும் அதனால் தமக்கு அது தெரியும் …
ஜாஹிட்: பெர்சேயில் ஐஎஸ் ஊருருவலா? அப்படி தகவல் ஏதுமில்லை
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சேயில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் ஊடுருவல் இருப்பதாகக் கூறப்படுவதைத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்தார். “அப்படி எதுவும் தகவல் இல்லை”, என்றாரவர். சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ்தான் அடிக்கடி அப்படிக் கூறி வருகிறார். நவம்பர் 19 பேரணியின்போது …
மரியா சின்னுக்கு மரண எச்சரிக்கை
நவம்பர் 19 பெர்சே 5 பேரணி நெருங்கிவரும் வேளையில் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு மரண எச்சரிக்கை ஒன்று வந்திருக்கிறது. நிழற்பட உருவில் அந்த மரண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தில் கருப்பு உடை அணிந்த ஒருவர். அவரின் ஒரு கை கத்தி ஒன்றைப் பிடித்திருக்கிறது. மற்றொரு கை …
பெர்சே தலைவர்களுக்கு கொலை மிரட்டல்
நேற்றிரவு பெர்சே தலைவர் மரியா சின்னுக்கு வாட்ஸ்அப் வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ்அப் செய்தில் மரியாவுடன் அவருடைய மூன்று மகன்கள், அம்பிகா மற்றும் மன்டீப் சிங் ஆகியோரும் கொலை செய்யப்படுவர் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளாதாக மரியா சின் வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இக்கொலை மிரட்டலைக்…
டிஓஜே வழக்கு குறித்து விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது- முன்னாள் நீதிபதி
1எம்டிபி நிதி கையாடல் செய்யப்பட்டதன் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) தொடுத்துள்ள சிவில் வழக்கு குறித்து அமைச்சர்கள் விளக்கமளிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று கூறி அவர்களைத் தடுக்கக் கூடாது என முன்னாள் முறையீட்டு நீதிபதி ஒருவர் கூறினார். முன்னாள் நீதிபதி முகம்மட் ஹிஷாமுடின் முகம்மட் யூனுஸ், நேற்று மக்களவைத் …
அமைச்சர்கள் டிஓஜே கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியதில்லை- பண்டிகார்
1எம்டிபி-இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் அமெரிக்க நீதித்துறை (டிஓஜே) தொடுத்துள்ள வழக்கு குறித்த கேள்விகளுக்கு மலேசிய நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இன்று அறிவித்தார். “வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது......எனவே அதைப் பற்றி விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்........அமைச்சர் பதில் …
சிகப்புச் சட்டையினரின் வார இறுதி வன்முறை ஒரு ஆரோக்கியமற்ற முன்மாதிரி-…
சனிக்கிழமை சிகப்புச் சட்டை இயக்கத்தினர் பெர்சே பங்கேற்பாளர்களையும் ஊடக உறுப்பினர்களையும் தாக்கிய சம்பவம் ஓர் ஆபத்தான முன்மாதிரி என்றும் அது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுவாராம் வலியுறுத்தியது. “அக்டோபர் 15-இல் சிகப்புச் சட்டை இயக்க ஆதரவாளர்கள் பெர்சே 5 வாகன அணி பங்கேற்பாளர்களைத் தாக்கியதுடன் ஊடக …
பேராக் பிகேஆர் செயலாளர் பிஏஏ-இன்கீழ் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார்
பேராக் பிகேஆர் செயலாளர் முகம்மட் அனுவார் ஜக்கரியா மூன்றாண்டுகளுக்குமுன், பேரணி நடத்துவது குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை என இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 2013 மே 12 ஜாலான் மேடான் இஸ்தானாவில் உள்ள பிகேஆர் அலுவலகத்தில் கித்தா லவான் பேரணி நடத்தப்போவது குறித்து அவர் போலீசுக்கு …
அடினான்: சரவாக் இழந்த அதிகாரத்தைத் திரும்பப் பெற சட்டத்திருத்தம் கொண்டுவர…
சரவாக் எம்பிகள், 1963ஆண்டு மலேசியா ஒப்பந்தம் வழங்கும் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவதற்காக கூட்டரசு அரசமைப்புக்குத் திருத்தம் கொண்டுவர முயல்வார்கள். “அது தேவையென்றால்” மாநில எம்பிகள் நாடாளுமன்றத்தில் அந்தத் திருத்தத்தைக் கொண்டுவர முயல்வார்கள் என சரவாக் முதலைமைச்சர் அடினான் சதேம் கூறியதாக த போர்னியோ போஸ்ட் தெரிவித்தது. 1976-ல் கூட்டரசு …
நஜிப்: ஜிஎஸ்டியைக் குறைப்பதா? பொருளாதாரம் முடங்கிவிடும்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யை ஆறு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்தார். ஜிஎஸ்டியால் உள்நாட்டுப் பயனீட்டளவு குறைந்துள்ளது என்று கூறி அதைக் குறைக்க வேண்டும் என்று லியு சின் தோங்(டிஏபி- குளுவாங்) நாடாளுமன்றத்தில் ஒரு பரிந்துரையை முன்வைத்தார். “இது …
ஆரம்ப தமிழ்க்கல்வி நமது உரிமையாக்கப்பட்டுள்ளது – தமிழ் அறவாரியம் பிரகடனம்
மலேசிய வரலாற்றில் 200 ஆண்டுகால வரலாற்றை பெற்றுள்ள ஆரம்ப தமிழ்க்கல்வியானது தற்போது அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்ட நிலையில் ஆளுமை பெற்று உரிமை நிலையாக்கப்பட்டுள்ளது என்கிறது தமிழ் அறவாரியம். கடந்த பதிமூன்று ஆண்டுகால தமிழ் அறவாரியத்தின் ஈடுபாடும் போராட்டமும் அதோடு சமூகத்தின் வழி கொண்ட உறவும் அரசாங்கத்தின் அங்கீகாரமும் உரிமை…
ஹுடுட் விவகாரத்தில் பிஎன் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளும் என்று சுப்ரா எதிர்பார்க்கிறார்
சட்டம் 355 (ஹூடுட்) சம்பந்தமாக இவ்வரத்தில் சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது குறித்து பிஎன் பங்காளிக் கட்சிகள் விவாதித்து ஒரு ஒப்பந்ததிற்கு வந்துள்ளன. அந்த ஒப்பந்தப்படி பிஎன் கட்சிகள் நடந்துகொள்ளும் என்று தாம் நம்புவதாக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். "அந்த…


