அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
பொதுமக்கள் முன்னிலையில் 19 பெண்களை எரித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்
ஈராக் நாட்டில் யாஸிதி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த Abdullah al-Malla இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சிறுபான்மை இனத்தவரான குர்து யாஸிதி பெண்களை…
30 ஆண்டுகளுக்கு பின்னர் கனமழை! வெள்ள நீரில் மூழ்கிய பரிஸ்…
30 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்த கனமழையினால் பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் முக்கிய நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன், கடந்தஇரு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பரிஸில் பெய்த கனமழை காரணமாக…
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!
யுத்தம் இடம்பெறும் நாடுகளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொண்ட நாடுகளின் 2015ம் ஆண்டுக்குரிய பட்டியல் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுாப்பு சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது…
பிரபல குத்து சண்டை வீரர் முகமது அலி காலமானார்
உலக புகழ் பொற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி (வயது 74) காலமானார். அமெரிக்காவின் பினிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். -http://www.nakkheeran.in
உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தும் நாடுகள் எவை தெரியுமா?
சர்வதேச அளவில் உடல்நலன் மீது அதிக கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழும் குடிமக்கள் உள்ள நாடுகளின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் உடல்நலன் மீது கவனம் செலுத்தி வரும் குடிமக்கள் நிறைந்துள்ள நாடுகள் குறித்து Good Country Index என்ற அமைப்பு அண்மையில் ஆய்வு ஒன்றை எடுத்துள்ளது.…
மலேசியாவில் கொடூரம்… 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த இங்கிலாந்து…
கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியர் மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெளியாகவிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரிச்சர் ஹக்லே (30), என்பவர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். 12 வயதுக்குட்பட்ட…
ஐஎஸ் அமைப்புக்கு எதிரான இராக்கிய இராணுவத்தின் இறுதித்தாக்குதல்?
இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து பலூஜா நகரை மீட்பதற்காக மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுத்திருப்பதாக இராக்கிய இராணுவம் அறிவித்துள்ளது. இராக் தலைநகர் பாக்தாதிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் பலூஜா நகரம் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பலூஜா நகரம் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.…
உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக…
ஆஸ்திரேலியேவை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று வருடாந்திர உலக அடிமைத்தன குறியீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகெங்கிலும் சுமார் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆசியாவில் மட்டும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்கள் விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்திக்கப்பட்டு தொழிற்சாலைகளிலோ, பண்ணைகளிலோ, பாலியல் தொழிலாளியாகவோ…
புலி கோவில் இனி புத்த கோவில் மட்டுமே
தாய்லாந்தின் கான்சானபுரி மாகாணத்திலுள்ள சர்ச்சைக்குரிய புத்த கோவிலிருந்து 137 புலிகளை அகற்றிவிட டஜன்கணக்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த புலி கோவிலிலுள்ள புலிகளை பிடிப்பதற்கு மயக்க ஊசிகளை துப்பாக்கியில் வைத்து பயன்படுத்த கால்நடை மருத்துவர்கள் தயாராகி வருகிறார்கள். அவற்றை பிடித்து அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் விடவுள்ளனர். கூண்டிலிருக்கும்…
’அகதிகள் வேண்டாம்….ரூ.4 கோடி அபராதம் செலுத்த தயார்’: சுவிஸ் பொதுமக்கள்…
ஐரோப்பிய நாடுகளிலேயே அகதிகளுக்கு ஒருபோதும் புகலிடம் அளிக்க கூடாது என கடுமையாக எதிர்த்து வருவது சுவிட்சர்லாந்தில் உள்ள Oberwil-Lieli என்ற கிராமம் தான் என தற்போது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிட்சர்லாந்து ஒரு கூட்டணி நாடாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள அகதிகளுக்கு புகலிடம் வழங்க தயார்…
சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா: குழந்தையின் பெற்றோர் மீது வழக்கு தொடுக்க பொலிசார்…
அமெரிக்கா நாட்டில் பெற்றோரின் அஜாக்கிரதை காரணமாக தான் கொரில்லா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டில் உள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்துள்ளான். அப்போது, அங்குள்ள…
தலிபான் புதிய தலைவன் இவன்தான்!
முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து தலீபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார். முல்லா உமர் மகனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. முல்லா அக்தர் மன்சூர் பலி ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தவர் முல்லா உமர். அவர் உடல்…
“வரலாற்று நிகழ்வு” ஹிரோஷிமா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒபாமாவின் உருக்கமான…
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளால் 2 லட்சம் பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது முதன் முதலாக ஜனாதிபதி ஒபாமா ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் ராணுவம் பேர்ல் துறைமுகத்தில் பயங்கர தாக்குதலை நடத்தியதால் அமெரிக்க கடும் கோபம் கொண்டது.…
மருத்துவமனையில் திருநங்கை பரிதாப பலி! எவ்வாறு இறந்தார் ? விசித்திர…
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார் சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து அலிஷா துப்பாக்கியால் சுட்டு படுகாயம் அடைந்தார். அவரது உடலில்…
குப்பை என ஒதுக்கிய கிரீடத்தின் மதிப்பு ரூ.67 லட்சம்: வியப்பில்…
பிரித்தானியாவில் குப்பை என ஒதுக்கி வைத்திருந்த பண்டைய கிரீடம் ஒன்றிற்கு 67 லட்ச ரூபாய் மதிப்பு இருப்பதை அறிந்த உரிமையாளர் வியப்பில் உறைந்துள்ளார். பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் குடியிருந்து வரும் முதியவர் ஒருவரை அரிய வகை பொருட்களை ஏலத்தில் விடும் நிறுவனத்தில் இருந்து சிலர் வந்து சந்தித்துள்ளனர். அவர்களின்…
குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்ட எகிப்திய விமானம்: தடயவியல் நிபுணர்கள்…
கடந்த 7 நாட்களுக்கு முன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான எகிப்து பயணிகள் விமானம் குண்டு வெடிப்பு மூலம் தகர்க்கப்பட்டுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு 18ம் திகதி ஈஜிப்ட்ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்)…
முஸ்லிம் மாணவர்கள் கை கொடுக்க மறுத்தால் அபராதம்: சுவிஸ் அதிரடி
சுவிஸ் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பேசலில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு முஸ்லிம் மதத்தை சார்ந்த…
ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும்: அமெரிக்கா திட்டவட்டம்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க பொருளாதாரத் தடைக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஃபிரைடு திங்கள்கிழமை கூறியதாவது: உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியதற்காக ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத்…
வான் எல்லைக்குள் நுழைந்து முல்லா அக்தர் மன்சூர் மீது தாக்குதல்:…
தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூரைக் கொல்வதற்காக அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தது குறித்து, தங்கள் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஹேலை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து வெளிவிவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் தாரிக் ஃபதேமி கூறியதாவது: அமெரிக்க…
வெனிசூலாவில் உணவுத் தட்டுப்பாடு; கொகோ கோலா உற்பத்தி இடைநிறுத்தம்
வெனிசூலாவில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக அங்கு செயற்பட்டு வரும் கொகோ கோலா நிறுவனம் அதன் உற்பத்திகளை இடைநிறுத்தியுள்ளது.கொகோ கோலா உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுள் 90 வீதமாகத் தேவைப்படுவது சீனியாகும்.சீனிக்கும் அங்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் எரிபொருட்கள் மீதே தங்கி இருக்கின்றது.சார்வதேச ரீதியில்…
தீவிரவாத தலைவன் முல்லா அக்தர் மன்சூர் ஆளில்லா விமானம் தாக்குதலில்…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆப்கானிஸ்தானின் உளவு ஏஜென்ஸியும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் தலைவன் மற்றும் கூட்டாளிகளை…
ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை: ஐ.எஸ் வெளியிட்ட புது ஓடியோ
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரை மணி நேரம் கொண்ட இந்த புது ஓடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான அபு முகமது அல் அத்னானி என்பவர் பேசுகின்றார். தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த ஓடியோவில் அமெரிக்கா…
பாக்தாத்தில் பிரதமர் அலுவலகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்: துப்பாக்கி சூட்டில் 4…
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 4 பேர் பலியாகி விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பகுதி பசுமை பிரதேசம்.…