ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் அடுத்த குறி யார்?

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார். சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு…

கிழக்கு யுக்ரெய்னின் ‘தேச அந்தஸ்து’ பற்றி பேச வேண்டும்’: புடின்

கிழக்கு யுக்ரெய்னுக்குரிய 'தேச அந்தஸ்து' தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களுக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளின் அங்கமாக இந்த பேச்சுக்கள் அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கிழக்கு யுக்ரெய்னில் வாழும் மக்களின் 'சட்டபூர்வ…

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: அமெரிக்கா…

இராக், சிரியாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியதுடன், பிற நாடுகளிலும் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ஆயத்தமாகி வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, "நியூயார்க்…

எபோலா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு!

தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் உலுக்கி வரும் செய்தியாக எபோலா வைரஸ் தொற்று காணப்படுகின்றது. உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் ஆனது மனிதர்களில் மட்டுமன்றி குரங்குகளிலும் தொற்றுகின்றது. தற்போது ZMapp எனும் புதிய மாத்திரையினைப் பயன்படுத்தி குரங்குகளில் காணப்பட்ட எபோலா வைரஸ் தொற்றுக்கு வெற்றிகரமாக நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த…

பிரித்தானியாவை அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பிரித்தானியாவையும் ஆட்கொண்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேசா மேய் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக, இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாத குழுக்களுடன் பிரித்தானியாவைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து  செயற்படுகின்றனர். மேலும்…

அணுசக்தியில் வல்லமை படைத்த ரஷ்யாவிடம் வாலாட்ட வேண்டாம்: புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, ஆக.30- அணுசக்தியில் வல்லமை படைத்த நாடான எங்களிடம் வாலாட்ட வேண்டாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைநகர் மாஸ்கோ அருகே க்ரெம்ளெனில் உள்ள செலிஜர் ஏரிக்கரையில் இன்று மாணவர்களிடையே பேசுகையில் ‘உக்ரைன் அரசின் வன்முறையில் இருந்து கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்ய மொழி…

கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா. தகவல்

ரஷிய ஆதரவுப் படையினரிடமிருந்து உக்ரைன் கைப்பற்றியதாகக் கூறப்படும் ஆயுதங்களை கீவ் நகரில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கும் சர்வதேச ராணுவப் பார்வையாளர்கள். கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: யாருக்கு வெற்றி?

காஸாவில் குண்டுச் சப்தங்கள் ஓய்ந்துவிட்டன.முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படாமலேயே கடந்த மாதம் 8-ஆம் தேதி அங்கு இஸ்ரேல் தொடங்கிய "ஆப்பரேஷன் புரொடக்டிவ் எட்ஜ்', கடந்த செவ்வாய்க்கிழமையோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த அமைதி எத்தனைக் காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நடந்து முடிந்த போரில் வெற்றி யாருக்கு…

ஐ.எஸ். எதிர்ப்பு: அஸாதுடன் கைகோக்க பிரான்ஸ் மறுப்பு

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா அதிபர் அல்-அஸாதுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என பிரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரான்சுவா ஹொலாந்த் வியாழக்கிழமை கூறுகையில், ""சிரியா அதிபர் அல் அஸாத், மத அடிப்படைவாதிகளின் கூட்டாளி. சிரியாவிலும், இராக்கிலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை, மனிதநேயத்துடன் கூடிய ராணுவ பலத்துடன் மட்டுமே…

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நேரடிப் பங்கு: அமெரிக்கா குற்றச்சாட்டு

ரஷிய ஆதரவுப் படையினருக்கு எதிராகப் போராடுவதற்கு தன்னார்வ வீரர்களை அனுமதிக்க வலியுறுத்தி, உக்ரைன் தலைநகர் கீவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷியா நேரடியாகப் பங்கேற்றுள்ளதாக அமெரிக்கா வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைனின் தென்கிழக்கில், அரசுப் படைகள் வசமிருந்த பகுதிகளில் பலவற்றை ரஷியா ஆதரவுப்…

பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பாகிஸ்தான்: அமெரிக்கா விமர்சனம்

பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பயங்கரவாதிகளால் அமைதியை இழந்து தவிக்கின்றது. நீண்ட காலமாக பயங்கரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த…

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் அமெரிக்க இளம்பெண்

வாஷிங்டன் : மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில், 26 வயது அமெரிக்க பெண் ஒருவர் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் சமூக சேவை செய்து வந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு பயங்கரவாதிகளிடம்…

நீண்ட கால போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள். இரு தரப்புக்கும் இடையே சமரசம்…

சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகிறது அமெரிக்கா

சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழில் வெளியான செய்தி: இராக்கிலுள்ள…

பாகிஸ்தானில் தலிபான் தளபதி படுகொலை

பாகிஸ்தானின் கைபர் பகுதியில் தெஹ்ரிக்-ஏ-தலிபான் தளபதி ஒருவர் வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இல்லத்துக்கு வெளியே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், நேட்டோ லாரி ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்…

அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால் ஐ.எஸ்.ஸூடன் நேரடி யுத்தம்

"ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றால், அந்த அமைப்புடன் நேரடியாகப் போரிடுவோம்' என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி கூறியுள்ளார். ராணுவ விமானமொன்றில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தற்போது இராக்…

அனைத்துக் குறிக்கோள்களையும் அடையும் வரை தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர்

அனைத்துக் குறிக்கோள்களும் நிறைவேறும் வரை காஸா பகுதி மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறினார். இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நெதன்யாஹு கூறியது: இஸ்ரேல் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேலின் ராணுவ…

ஐஎஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு

ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. தமது பதில் நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக, எகிப்து, ஜோர்தான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றை சவுதி அரேபியா கூட்டியுள்ளது.…

சீனாவில் எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

சீனாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டுப்  பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் க்ஸிங்ஜியாங் மாகானத்தை சேர்ந்த எட்டு தீவிரவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்…

லிபியாவின் பிரதான விமான நிலையத்தை கைப்பற்றிய போராளி குழு

லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக மிஸ்ரதா பகுதி போராளிகள் அறிவித்துள்ளனர். லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முவம்மர் கடாபி கொல்லப்பட்ட பிறகு தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற இஸ்லாமிய போராளி குழுக்கள் தீவிரம் காட்டி வந்தன. இதனால் அந்நாட்டு தேசிய படைக்கும்,…

சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 2 லட்சம் பேர் பலியானதாக…

சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிரியாவின்…

மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் – 70 பேர் சுட்டுக்கொலை

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் மசூதி மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள சன்னி பிரிவு ஆதரவு தீவிரவாதிகள் கைப்பற்றிய தியாலா உள்ளிட்டப் பகுதிகளை மீட்கும் முயற்சியில், ஷியா பிரிவு தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தியாலாவில்…

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்யாவில் இயங்கி வந்த அமெரிக்காவின் நான்கு உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. நான்கு மெக்டொனால்ட் உணவங்களை தற்காலிகமாக மூட ரஷ்யா சுகாதார துறை அதிகாரிகள் உத்த விட்டுள்ளார்கள். இந்த நான்கு மெக்டொனால்ட் உணவகங்களும் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை ரஷ்ய சுகாதாரதுறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளர். இதுபோன்ற ரஷ்யாவில் உள்ள…