ஒடிசாவில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

india-maoistஒடிசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

பாதுகாப்புப் படையினரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

TAGS: