மீனவர் பிரச்சினை! இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும்: ஜீ.கே.வாசன் எச்சரிக்கை

GKVasanஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் தடுப்புக்காவலை தொடர்ந்து நீடிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவர்களுக்கு துரோகம் செய்தால் இந்தியா-இலங்கை உறவு பாதிப்பு ஏற்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் எச்சரித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீது இனியும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தவோ, அவர்களை அச்சுறுத்தவோ கூடாது.

தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கை கடற்படைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்கும் முடிவும் கண்டிக்கத்தக்கது.

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: