நடிகை சுமித்ராவின் கணவர் மரணம்

sumithra_001பழம்பெரும் நடிகை சுமித்ராவின் கணவரும், கன்னட திரைப்பட இயக்குநருமான ராஜேந்திர பாபு மரணமடைந்தார்.

திருச்சூரைச் சேர்ந்த ராகவ நாயருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தவர் சுமித்ரா.

தமிழில் அண்ணன் ஒரு கோவில், புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பின்னர் மலையாள நடிகர் ரவிக்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

இதனையடுத்து கன்னட இயக்குனர் டி.ராஜேந்திர பாபுவை மறுமணம் செய்து கொண்டார், இவர் கன்னடத்தில் 50–க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

இந்தத் தம்பதிக்கு உமா, நட்சத்திரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர், இவர் இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை டி.ராஜேந்திரபாபு(வயது 92) தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது சுமித்ரா வீட்டில் இல்லை, வெளியூர் சென்றிருந்தவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பெங்களூருக்கு விரைந்துள்ளார்.