அரசியல் நிர்பந்தத்தால் புகாரை வாபஸ் பெறவில்லை: ஸ்வேதா மேனன்

swetha_menon_001காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் என்னிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான புகாரை அரசியல் நிர்பந்தம் காரணமாக நான் வாபஸ் பெறவில்லை என்று நடிகை சுவேதா மேனன் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் கடந்த சில நாட்களுக்கு முன் கொல்லத்தில் நடந்த படகு போட்டி விழாவில் கலந்து கொண்டபோது, காங்கிரஸ் எம்பி பீதாம்பர குருப் தன்னை சில்மிஷம் செய்ததாக புகார் கூறினார்.

பீதாம்பர குருப், என்னை சில்மிஷம் செய்தது உண்மை தான் என்றும், இந்த வழக்கில் கடைசி வரை உறுதியாக இருப்பேன் என்றும் சுவேதா மேனன் கூறினார்.

ஆனால் மறுநாளே புகாரை அவர் வாபஸ் பெற்றார். அரசியல் நிர்பந்தம் காரணமாக அவர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் நடிகை சுவேதா மேனன் நேற்று அளித்த பேட்டியில், கொல்லத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பீதாம்பர குருப் என்னை சில்மிஷம் செய்து உண்மை தான். அந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன்.

அதன் பிறகு பீதாம்பர குருப் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து 82 வயதான எனது தந்தை, கணவர் மற்றும் எனது குரு ஆகியோர் கூறியதை அடுத்து அந்த புகாரை வாபஸ் பெற முடிவு செய்ய தீர்மானித்தேன் என்றும் அரசியல் நிர்பந்தம் காரணமாக புகாரை வாபஸ் பெறவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அன்றைய தினம் நடந்த சம்பவம் குறித்து முதல்வர் உம்மன்சாண்டியிடம் புகார் கூறியுள்ளேன் என்றுதெரிவித்துள்ளார்.