அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து தமிழக அரசு பேசவில்லை: சீமான் கண்டனம்

seeman_03கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றுவதாக கேரள அரசு கூறுகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உயர்த்த உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கேரள அரசு முன்வரவில்லை.

தமிழர், மலையாளி உணர்வை தூண்டி காங்கிரஸ் கட்சி ஓட்டு வாங்க முயற்சிக்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசு பேசவில்லை. இவ்வாறு கூறினார்.

TAGS: