தேவயானிக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியாவுக்காக ஏன் துடிக்கவில்லை? – கருணாநிதி ஆதங்கம்

isaippiriyaa_thevajani_100தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார்.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர்  தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில்,கருணாநிதி தெரிவிக்கையில்,
அந்த ஒரு இந்தியப் பெண்ணுக்காக, அலறித் துடிக்கும் இந்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்காகவும், பாலச்சந்திரனுக்காகவும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்க வில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவிற்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன் என மிகவும் ஆதங்கத்தோடு தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

TAGS: