விமான நிலைய குப்பைத்தொட்டியில் மூன்று கிலோ தங்கம் மீட்பு

gold_005ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தின் கழிவறைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட மூன்று கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விமான நிலைய ஊழியர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.

மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் இந்த பார்சலை குப்பைத்தொட்டியில் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

தங்கம் இருந்த பார்சல் கிடைத்தவுடன் அங்கிருந்த பயணிகளை விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சுங்க சோதனை முடித்து பத்து பேரைத் தவிர மற்றவர்கள் சென்றிருந்தனர். எனவே மீதியிருந்த அனைவரும் விசாரிக்கப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டனர்.

சந்தேகம் ஏற்பட்ட ஊழியர்களிடத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது என்று சுங்கத் துணை ஆய்வாளரான எச்.எஸ்.மீனா தெரிவித்துள்ளார்.

TAGS: