ஐ.மு.கூட்டணி தடுமாற்றம் : ஆம் ஆத்மி கட்சி அகராதி

arun jedliபுதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ அகராதியாக செயல்படுகிறது. அதனால், மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது  என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார். இதுபற்றி அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: அரசியலில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் பா.ஜ.வுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாடுகள் பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை.

கூட்டணியே தடுமாறி கொண்டிருக்கிறது. நம்பிக்கை தரும் வகையில் அந்த கூட்டணியின் செயல்பாடுகள் இல்லை. மீடியாக்களால் தூக்கிவிடப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.வின் வெற்றி வாய்ப்பை சற்று குறைக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த கட்சியின் அகராகிதனமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய போராட்டம், மக்களின் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அதனால், காங்கிரசின் தோல்வி, ஆம் ஆத்மியின் அகராதிதனம், இல்லாத 3வது அணி ஆகிய அனைத்தும் சேர்ந்து நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமையும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போல் நடக்க உள்ளது. மோடியா – ராகுலா என்று நடக்க உள்ள போட்டியில் மோடி மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவார். பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியும். அதற்கு கிடைத்து வந்த மீடியா ஆதரவும் பா.ஜ.வுக்கு சற்று கலக்கம் ஏற்படுத்தியது உண்மைதான். எனினும், அதன், அகாராதி தனம் வெளியான பின், அந்த கலக்கம் போய்விட்டது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக குடியரசு தின கொண்டாட்டத்தை சீரழிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்தது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் எப்படி நடந்து கொள்வது என்று காங்கிரசுக்கு தெரியவில்லை. வேலியில் இருந்த ஓணானை மடியில் கட்டி கொண்ட கதையாக காங்கிரசின் நிலை மாறிவிட்டது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

பா.ஜ.வின் மற்றொரு மூத்த தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வீ கூறுகை யில்,‘ திக்கு தெரியாத ஏவுகணைகளாக ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர். அரசியல் சட்டத்தை மதித்து அவர்கள் முதலில் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

TAGS: