கன்னத்தில் அறைவிட்ட நபரை சந்தித்த கெஜ்ரிவால்!

kejrival_meetbeatman_001அரவிந்த் கெஜ்ரிவால் தன் கன்னத்தில் அறைவிட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்துள்ளார்.

டெல்லியில் சுல்தான்புர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, லாலி என்ற ஆட்டோ ஓட்டுநர் அவரை நெருங்கி மாலை அணிவித்த பின்னர் அவரது கன்னத்திலும் தாடையிலும் ஓங்கிப் பதியும்படி அடித்துள்ளார்.

இதனால் ஒரு கணம் நிலை தடுமாறிய கெஜ்ரிவாலுக்கு கன்னம் மற்றும் கண்கள் பகுதி வீங்கியுள்ளது.

உடனே ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து பின்பு பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், கெஜ்ரிவால் ஆட்டோ ஓட்டுநர்களை பெரிதும் ஏமாற்றிவிட்டதால் ஆத்திரத்தில் அடித்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசியுள்ள கெஜ்ரிவால், தாக்குதல் நடத்தியவர்களை தான் மன்னித்துவிடுவதாகவும், அவர்கள் அடிக்க விரும்பினால் தானே அந்த இடத்துக்கு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் சந்தித்ததாகவும் அப்போது, அவரிடம் ஆட்டோ ஓட்டுநர் மன்னிப்பு கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: