தமிழர்கள் வாழவேண்டுமெனில் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சீமான்

seeman_002தமிழர்கள் வாழ்வதற்கு ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள அவர், எம்.ஜி.ஆர். வழியில் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கட்சி அதிமுக.

அதனால் தான் சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தோம்.

அப்போது வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்று சட்டப்பேரவையில் முதல்வர், தீர்மானம் நிறைவேற்றினார்.

மேலும், தனி ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்புதான் தீர்வு என்பதனை வலியுறுத்தியது அதிமுக மட்டும்தான்.

இலங்கை தமிழர் படுகொலை, மீனவர்கள் படுகொலை, முல்லைப்பெரியாறு, காவிரி நீர் பிரச்சினை போன்ற அனைத்துக்கும் காங்கிரஸும், தி.மு.க.வுமே காரணம். தமிழ் இனத்தை கருவறுத்தது காங்கிரஸ், இதை வேடிக்கை பார்த்தது பா.ஜ.க.

மேலும், நாம் நமது இனத்தின் விடுதலையை காக்க இரட்டை இலையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

TAGS: