இலங்கைத் தமிழரின் நலனுக்கு முன்னுரிமை! – மோடி உறுதி

narendra_modiஇலங்கை, மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் நலத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவுக்கு அடிபணியாத இலங்கை,  பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்பில் கடுமையான அணுகமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: