அஸ்ஸாம்: முஸ்லிம்கள் மீது தாக்குதல், 11 பேர் பலி

assamஇந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த இருவேறு தாக்குதல்களில் முஸ்லிம் கிராமவாசிகள் 11 பேரை போடோ இன கிளர்ச்சிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் சுட்டுக்கொன்றுள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இக்கொலைகளுக்கு காரணம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் ஒரு பிரிவினர்தான் என உள்ளூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

போடோ இன மக்களுக்கு தனியான தாய்நாடு வேண்டும் எனக் கோரி இக்கிளர்ச்சிக்காரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

இவர்கள் அடிக்கடி முஸ்லிம்களுடன் மோதுவதுண்டு; அண்டையிலுள்ள வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து தமது நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் முஸ்லிம்கள் என்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் பல ஆண்டுகள் முன்பாகவே அஸ்ஸாமில் தாங்கள் குடியேறிவிட்டதாக இங்கு வாழும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

TAGS: