பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயார்: நரேந்திர மோடி பேட்டி

narendra_modiAபுதுடில்லி:நான் தவறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டால் அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதாக கூறப்பட்டால், மற்றவர்களை போல் இல்லாமல், விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தான் பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: நான் 4 அல்லது 5 மாதங்களாக பல மேடைகளில் உரையாற்றியுள்ளேன். நான் கடுமையான உழைப்பாளி, சிறு வயதில் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளேன். கட்சி எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக பணிபுரிந்துள்ளேன். கடவுள் எனக்கு வழங்கிய வலிமையை உணர்ந்துள்ளேன்.இதுவரை நான் கலந்து கொண்ட எனது பேரணி எதுவும் ரத்து செய்யப்படவில்லை. எந்த பேரணியும் தாமதமானதாக மீடியாக்கள் செய்தி வெளியிடவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய வாழ்த்துக்கள் மூலம் நான் பலமடைகிறேன். சிறு வயது முதல் யோகா செய்து வருகிறேன். வருடத்தில் 300 நாட்கள் யோகா செய்ய முயற்சி செய்வேன்.

வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. 10 ஆண்டுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த திக்விஜய் சிங் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை. சத்தீஸ்கர் மாநிலமும் நக்சல்கள் பாதிக்கப்பட்ட மாநிலம். பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கின்றனர். இரு மாநிலமும் பா.ஜ., ஆட்சியில் வளர்ந்துள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சியின் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக குஜராத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவர். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். பொது வாழ்க்கையில் நீண்ட நாட்களாக உள்ளேன். இதுவரை எந்த வழக்கும் என்மீது பதிவு செய்யப்பட்டதில்லை. குஜராத் போலீசார் தங்கள் பணியினை சிறப்பாக செய்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவர். அவர்கள் என்னிடம் கூட விசாரணை அறிக்கையை காட்ட மாட்டார்கள்.

இந்த தேர்தலை அரசியல் படிக்கும் மாணவன் போல் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். கற்றும் வருகிறேன். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பல காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கிவிட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டோம் என காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரிந்து விட்டது. இரட்டை இலக்கதத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது சந்தேகம்.முதல் முறையாக 25 கட்சிகளுடன் பா.ஜ., தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்துள்ளது. இது எங்களுக்கு சாதகமான செய்தி. காங்கிரசுக்கு அல்ல.

வாஜ்பாய் ஆட்சியில் 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்ற எண்ணம் இருந்தது. இது எங்களின் சாதனையையும், கொள்கைகள் தெளிவாக உள்ளதையும் எடுத்துக்காட்டியது. சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவையே பா.ஜ.,வின் தேர்தல் மந்திரங்கள். மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். இருப்பினும் வரும் 16ம் தேதி வரை நான் எதுவும் கூறமாட்டேன். பா.ஜ.,வுக்க சிறந்த சாதனை உள்ளது. வரலாறு உள்ளது. காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர். சில வளர்ச்சி திட்டங்கள் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஆளும் மாநிலங்களிலும் சாத்தியமாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சயில் இந்தியாவை ஊழல் இந்தியா என பெயரெடுக்கும் படி மாற்றியுள்ளனர். என்னுடைய கடுமையான உழைப்பு காரணமாக இதனை மாற்றி, வலிமையான இந்தியாவாகவும், சீனாவை பின்னுக்கு தள்ளி நாட்டை மாற்றிக்காட்டுவேன். இந்தியாவில் 60 வருடங்கள் வீணாகி விட்டது. இன்னும் 5 வருடங்கள் வீணாக வேண்டுமா? நாம் எடுக்கும் முடிவுகளை கொள்கைகள் தான் வழிநடத்தி செல்லும். ஏழைகளுக்கான பணம் ஊழல் காரணமாக தொலைந்துவிட்டது.

யாருடைய தலையீடு மற்றும் ஊழல் இல்லாமல் குஜராத்தில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் அனைத்து தகவல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை குறைத்துளளோம். மத்திய அரசில் ஜெயந்தி வரி உண்டு என பலர் கூறியுள்ளனர். இது இல்லாம் எந்த கோப்பும் நகராது எனவும் கூறியுள்ளனர். அவர் பதவி விலகிய பின் பல கோப்புகள் கையெழுத்தாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

கறுப்பு பண விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டுள்ளது. கறுப்பு பணத்திற்கு எதிராக பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி பல பேரணி மற்றும் யாத்திரைகளை நடத்தியுள்ளார். கறுப்பு பணம் விவகாரம் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை பா.ஜ., திருப்பி கொண்டு வரும்.

நான் வத்ரா பற்றி எதுவம் கூறியதில்லை. ஊழலுக்கு எதிராக மட்டும் போராடி வருகிறோம். நான் பிரதமரானால் கூட சட்டத்தை விட உயர்ந்தவனல்ல. நான் தவறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டாலோ, அல்லது தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சட்டப்பட்டாலோ விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன். நான் பிரதமரானாலும் என் மீது விசாரணை நடத்தலாம். பிரியங்கா தற்போது அரசியலில் இல்லை. இதனால் அவருக்கு நான் அவருக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அரசியல் விமர்சனங்களுக்கு எந்த குடும்ப உறுப்பினர்களையும் கொண்டு வரக்கூடாது.நான் பிரியங்கா பற்றி எந்த கருத்தும் தெரிவித்ததில்லை.

கடந்த 12 வருடங்களாக என் மீது தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. எனக்கு எதிராக செயல்பட இன்னும் பலர் காங்கிரசுக்கு தேவைப்படுகின்றனர். காங்கிரசார் என்னை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் என் குடும்பத்தினர் திருப்பி விமர்சனம் செய்ததில்லை. அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் வைத்து என்னை விமர்சனம் செய்துள்ளனர். மக்கள் விரும்பினால் இன்னும் 5 ஆண்டுகள் காங்கிரசுக்கு வாய்ப்பு தரலாம் அல்லது எனக்கு ஓட்டுப்போடலாம்.அமித் ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறு. அமித் ஷா மீதான குற்றச்சாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் விடுவித்துள்ளது. அவர் மீதான தடையையும் அகற்றியுள்ளது.

பா.ஜ.,வின் கொள்கைகள் வாஜ்பாய் காலத்திலிருந்து தெளிவாக உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் வசிக்கும் நாம் ஏன் பயத்துடன் வாழ வேண்டும். நமது உறவு மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும். இந்தியாவின் கொள்கைகள் அடிப்படையில் பாகிஸ்தானுடனான உறவு கையாளப்படும். அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணிபுரிகின்றனர். பல அமெரிக்கர்கள் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்துள்ளனர். அதிகளவிலான முதலீட்டாளர் குழுவினர் குஜராத்தில் உள்ளனர். இந்தியாவில் அன்னிய முதலீட்டின் அளவு அதிகரிக்கப்படும்.

கட்சி எனக்கு வழங்கிய பணியை சிறப்பாகவும் திறமையாகவும் செய்வேன். பா.ஜ., திறமையான கட்சி. ஒழுங்கு முறைகளை பின்பற்றும் கட்சி. வாஜ்பாய் காலத்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அத்வானிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு நன்றாக <உள்ளது என கூறினார்.

TAGS: