நல்லெண்ண நடவடிக்கையாம் : 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவு

நல்லெண்ண நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை சிறைகளில் வாடும் 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 82 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் தமிழக மீனவர்கள் நாளை தமிழகம் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 7ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 82 மீனவர்களும் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

TAGS: