விரைவில் குஜராத்தின் பாலிதானா நகரமே சுத்த சைவமாக மாறுகிறது

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா நகரமே விரைவில் சுத்த சைவமாக அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான நடைமுறைகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

ஜெயின் சமூக மக்கள் அதிகமாக வசித்து வரும் பாலிதானாவில் 25 சதவீத சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். அங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மகாவீர் கோயிலும் அமைந்துள்ளது. இந்த நகரை சைவ நகரமாக அறிவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரும், ஜெயின் மதத் தலைவர்களும் பேச்சு நடத்தினர். பின்னர் நகராட்சி சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு மாவட்ட நிர்வாகம் மாநில நகர்புற வளர்ச்சி துறையும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனையடுத்து மேற்கண்ட நடைமுறைகளை விரைந்து முடிக்க பாலிதானா நகராட்சி முயற்சி செய்து வருகிறது.

TAGS: