சூர்யாவுடன் படம் பண்ணும் எண்ணம் இல்லை: கௌதம் மேனன்

தல55 படம் குறித்து அவ்வப்போது ஏதாவது சுவாரஷ்யமான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தல 55 படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் மனதில் இருந்த அத்தனை விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அப்போது சூர்யாவும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும், தனது படத்தில் இருந்து சூர்யா விலகியது குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அதில் ‘சூர்யாவுடன் படப்பிடிப்பு, பின் நின்றது வரை எல்லாம் உங்களுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை, இருந்தாலும் அவர் என்னை ஒதுக்கியதால் தான் அஜித் படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அந்த விதத்தில் எனக்கு சந்தோஷம் தான் என்று தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து மறுபடியும் படம் பண்ணும் எண்ணமில்லை என்றும் அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

சூர்யாவை வைத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கௌதம் மேனன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.